ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் அதிக அளவில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. ஒரு ஓட்டுக்கு 6 ஆயிரம் வரை கொடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்த தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட டி.டி.வி.தினகரன் வெற்றி பெற்றார்.
இந்த நிலையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பற்றி கருத்து தெரிவித்திருந்த, கமல்ஹாசன் வாக்காளர்கள் பணம் வாங்கிக் கொண்டு ஓட்டுப்போட்டதாகவும், ஓட்டுக்கு பணம் வாங்கிக் கொண்டு வாக்களித்திருப்பது திருடர்களிடம் பிச்சை எடுத்ததற்கு சமம் என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்த கருத்து ஆர்.கே.நகர் வாக்காளர்களை அவமானப்படுத்துவதாக ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட நேதாஜி நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் சிவா ஆருத்ரா என்பவர் ஆர்.கே.நகர் போலீசில் கமல் மீது புகார் அளித்துள்ளார்.
புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை. ஆனாலும் இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு கமல்ஹாசனுக்கு சம்மன் அனுப்ப முடிவு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதேபோன்று உடுமலைபேட்டை காவல் நிலையத்தில் வழக்கறிஞர் சாதிக் பாட்ஷா என்பவரும் புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கமலின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தினகரன் ஆதரவாளர்கள் தமிழ்நாடு முழுவதும் கமலுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து நேற்று இரவு மலேசியா செல்லும் வழியில் விமான நிலையத்தில் கமலிடம் கேட்டபோது. அதுபோன்ற புகார்கள் என் கவனத்துக்கு முழுமையாக வந்தால் பதில் சொல்வேன். என்று கூறினார்.