ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தென்னிந்திய நடிகர் சங்க கட்டட நிதிக்காக மலேசியாவில் பிரமாண்ட நட்சத்திர கலைவிழா நடக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக 300க்கும் மேற்பட்ட திரை நட்சத்திரங்கள் மலேசியா சென்றுள்ளனர். படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ரஜினி தனது மனைவி லதாவுடன் மலேசியா புறப்பட்டுச் சென்றார்.
கோலாலம்பூர் விமான நிலையத்தில் இறங்கிய ரஜினியை நடிகர்கள் நந்தா, ரமணா ஆகியோர் வரவேற்று அழைத்துச் சென்றனர். அந்த நாட்டின் உயர் அடுக்கு பாதுகாப்பில் ரஜினி அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர் தான் தங்க வேண்டிய ஓட்டலுக்குச் சென்ற ரஜினி, அங்கு தனது நண்பர்கள், திரைப்படத் துறை சார்ந்தவர்களை சந்தித்துப் பேசினார். ரஜினி விமானத்தில் பயணம் செய்த போதும், ஓட்டலில் தங்கியிருந்த போதும் அவருடன் ரசிகர்களை போன்று நடிகர், நடிகைகள் செல்பி எடுத்துக் கொண்டனர்.
ரஜினி நேற்று மலேசிய பிரதமர் நஜிப் ரசாக்கை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு 30 நிமிடங்கள் நடந்தது. இருவரும் கலை நிகழ்ச்சி ஏற்பாடுகள், இரு நாட்டு நல்லுறவு, மற்றும் அரசியல் குறித்து பேசியதாக தெரிகிறது. ரஜினியின் அரசியல் பிரவேசத்துக்கு மலேசிய பிரதமர் தனது தனிப்பட்ட வாழ்த்தையும் தெரிவித்திருக்கிறார்.
இந்த சந்திப்பு குறித்து மலேசிய பிரதமர் தனது டுவிட்டரில் "மீண்டும் ரஜினியை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். மலேசியாவில் உங்கள் நேரத்தை சிறப்பாக செலவிடுங்கள்" என்று குறிபிட்டிருக்கிறார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை வந்த மலேசிய பிரதமர் நஜிப் ரசாக், ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசியதும், அப்போது தனது வீட்டுக்கு வருமாறு அவர் ரஜினிக்கு அழைப்பு விடுத்ததும் குறிப்பிடத்தக்கது.