ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சென்னையில் நாளை மறுநாள் (6ந் தேதி) தென்னிந்திய சினிமா வளர்ச்சி கருத்தரங்கு நடக்கிறது. தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையும், பாரத் நிதி என்ற அமைப்பும் இணைந்து இதனை நடத்துகிறது. கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடக்கும் இந்த கருத்தரங்கில் தென்னிந்திய சினிமாக்களின் எதிர்காலம், வெளிநாட்டு வியாபாரம், நிதி, கடன், புதிய தொழில்நுட்பம் உள்ளிட்ட பல பிரச்சினைகள் குறித்து விவாதித்து புதிய முடிவுகள எடுக்கப்படுகிறது.
தமிழ்நாடு துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் மத்திய மாநில அமைச்சர்கள் இதில் கலந்து கொள்கிறார்கள். இதுகுறித்து தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தலைவர் ஆனந்தா சுரேஷ், செயலாளர் ரவி கொட்டாரக்கரா, காட்ரகட்ட பிரசாத், பாரத் நிதி அதிகாரி அனூப் ஆகியோர் நிருபர்களுக்கு கூட்டாக பேட்டி அளித்தனர் அப்போது அவர்கள் கூறியதாவது:
இந்த போன்ற ஒரு கருத்தரங்கு முதன்முறையாக தென்னிந்திய சினிமாவில் நடத்தப்பட இருக்கிறது. இதில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம், மத்திய, மாநில அமைச்சர்கள் பங்கேற்கிறார்கள். ஒவ்வொரு மொழி சினிமா துறைக்கும் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. பைரஸி மிக முக்கியமான பிரச்சினை. அதேப்போல இந்தி சினிமாவுக்கு இருப்பதை போல ஓவர்சீஸ் மார்க்கெட் தென்னிந்திய படங்களுக்கு இல்லை. தமிழ் படங்கள் 25 நாடுகளிலும், தெலுங்கு 5 நாடுகளிலும், மலையாளம் 4 நாடுகளிலும், கன்னடம் 1 அல்லது 2 வெளிநாடுகளில் தான் வெளியாகின்றன. அந்த மார்க்கெட்டை விரிவாக்குவது பற்றியும் விவாதிக்கப்படும்.
ஆரம்பத்தில் ஐடிபிஐ வங்கி நெகடிவ் ரைட்ஸை மட்டுமே வைத்து சினிமா தயாரிப்புக்கு கடன் கொடுத்து, 100% அதை திரும்ப பெற்றது. பின் சில தவறான அணுகுமுறைகளால் அது நின்று விட்டது. அதை மீண்டும் பெற வழி செய்ய முயற்சி செய்வோம். வெள்ளை அறிக்கை தயார் செய்து மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி மூலமாக பிரதமர் மோடியிடம் கொண்டு செல்ல இருக்கிறோம் என்றார் சேம்பர் தலைவர் ஆனந்தா எல். சுரேஷ்.