ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
என்னால் தனுஷை வைத்து படம் பண்ண முடியாது என்று அவரது அப்பாவும், இயக்குநருமான கஸ்தூரி ராஜா கூறியுள்ளார். பிரபல இயக்குநரும், தயாரிப்பாளருமான கஸ்தூரி ராஜா, துள்ளுவதோ இளமை படம் மூலம் தனது மகன் தனுஷை ஹீரோவாக அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் காதல் கொண்டேன், புதுப்பேட்டை உள்ளிட்ட படங்களில் நடித்து தொடர் ஹிட் படங்களாக கொடுத்த தனுஷ், வெற்றி நாயகனாக ஜொலித்தார். தென்னக ப்ரூஸ்லி என்ற பெயரோடு தமிழ் சினிமாவில் ஒரு இடத்தை பிடித்திருக்கும் தனுஷ், நீண்ட இடைவெளிக்கு பிறகு தனது அப்பா கஸ்தூரி ராஜா தயாரிப்பில் 3 படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை தனுஷின் மனைவி ஐஸ்வர்யா இயக்கி இருக்கிறார்.
3 படம் வெளிவருவதற்கு முன்பே அப்படத்தில் இடம்பெற்ற கொலவெறி பாடல் தனுஷை உயரிய நிலைக்கு கொண்டு போய் உள்ளது. பிரதமர் விருந்தில் பங்கேற்பு, சச்சின் டெண்டுல்கருக்கு ஆல்பம் என்று உயர பறந்து கொண்டிருக்கிறார் தனுஷ். கொலவெறி பாடலாலேயே 3 படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு உண்டாகி இருக்கிறது. இப்படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்று அனைவரும் காத்து கொண்டு இருக்கின்றனர்.
இந்நிலையில் 3 படம், மார்ச் 30ம் தேதி ரிலீஸ் ஆக இருப்பதாக, அப்படத்தின் தயாரிப்பாளரும், தனுஷின் அப்பாவுமான கஸ்தூரி ராஜா தெரிவித்துள்ளார். மேலும் இனிமேல் தனுஷை வைத்து தன்னால் படம் இயக்க முடியாது என்றும், அவருடைய ரேஞ்சு எங்கேயோ போய்விட்டது என்றும், இனிமேல் தான் படம் எடுத்தால் புதுமுகங்களை வைத்து தான் படம் எடுப்பேன் என்றும் கூறியுள்ளார்.