ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகர் சங்க கட்டடம் கட்டுவதற்கு நிதி திரட்டும் நோக்கத்தில் வருகிற 6 ஆம் தேதி மலேஷியாவில் கலைநிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்தக் கலைநிகழ்ச்சியை தங்களுடைய தேவைக்கு பயன்படுத்திக்கொள்ளும் நோக்கத்தில் சிலர் பிளைட்டை பிடித்துள்ளனர்.
நடிகர் சங்கத்தின் செயலாளரான விஷால், தன்னுடைய இரும்புத்திரை, சண்டக்கோழி-2 படத்தின் புரமோஷனுக்கு பயன்படுத்துவதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்ததுள்ளது. இந்நிலையில், 'கோடிட்ட இடங்களை நிரப்புக' படத்தை தொடர்ந்து பார்த்திபன் இயக்கி, நடிக்கவிருக்கும் உள்ளே வெளியோ- 2 படத்திற்காக தயாரிப்பாளர்களைத் தேடும் முயற்சியில் இறங்கியுள்ள பார்த்திபன் அதற்காகவே மலேஷியாவுக்கு வர இருப்பதாக வெளிப்படையாய் அறிவித்துள்ளார்.
பார்த்திபன் இயக்கி, நடித்து, தயாரித்து 1993-ல் வெளியான படம் 'உள்ளே வெளியே'. ஆபாசமான படம் என்று கடும் கண்டத்தை சந்தித்த இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்துள்ளார் பார்த்திபன். இந்தப் படத்தின் தயாரிப்பாளரைத் தேடித்தான் மலேஷியா செல்கிறார்.
''மலேசிய நாட்டிற்கோர் நற்செய்தி! 5,6,7 தேதிகளில் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நடக்கும் விழாவுக்கும், என அடுத்த படமான 'உள்ளே வெளியே-2' படத்திற்கான தயாரிப்பாளர்களை உறுதி செய்யும் பணிக்காகவும் மலேசியா வருகிறேன்'' என்று இது குறித்து டுவீட் செய்துள்ளார்.