ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
சினிமாவில் பத்து ஆண்டுகளுக்கு மேலாக பயணித்து வரும் காஜல் அகர்வால், இதுவரை நான் கடந்து வந்த பாதையில் 2017ம் ஆண்டுதான் எனக்கு அதிக நம்பிக்கை கொடுத்த வெற்றிகரமான ஆண்டாக அமைந்தது என்கிறார் காஜல்அகர்வால்.
அதுகுறித்து அவர் கூறுகையில், மெகா ஸ்டார் சிரஞ்சீவியுடன் நான் நடிப்பேன் என்று நினைத்தே பார்க்கவில்லை. அந்த வாய்ப்பு கைதி எண் 150 படத்தில் எனக்கு கிடைத்தது. அதையடுத்து, எனது நண்பர் ராணாவுடன் நேனே ராஜூ நேனே மந்திரி படத்தில் நடித்தேன். தமிழில், அஜீத்தின் விவேகம், விஜய்யின் மெர்சல் படங்களில் நடித்தேன்.
இப்படி ஒரே ஆண்டில் பல ஸ்டார்களுடன் நடித்தேன். இந்த படங்கள் கொடுத்த வெற்றி காரணமாகத்தான் இப்போது பாரிஸ், பாரிஸ், அவே படங்களில் நடிக்கிறேன். அந்த வகையில், எனது கேரியரில் 2017 மிகவும் முக்கியமான ஆண்டாகி விட்டது என்கிறார் காஜல் அகர்வால்.