மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? |
சூர்யா நடிப்பில் பொங்கலுக்கு வெளிவரும் படம் தானா சேர்ந்த கூட்டம். சூர்யா ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். சூர்யாவுடன் நடிக்க வேண்டும் என்பது என் பள்ளி பருவத்து ஆசை, அது இப்போது நிறைவேறியிருக்கிறது என்கிறார் கீர்த்தி சுரேஷ். அவர் மேலும் கூறியிருப்பதாவது:
தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நான் பிராமண பெண் வேடத்தில் நடிக்கிறேன். படத்தில் என்னுடைய கதாபாத்திரத்துக்கு பெயரே கிடையாது. நான் ஹுமர் கலந்த சஸ்பென்ஸ் வேடத்தில் நடிக்கிறேன். இயக்குநர் விக்னேஷ் சிவன் கதை சொல்லும் போதே, என்னுடைய கதாபாத்திரமும் பிடித்திருந்தது.
பள்ளி பருவத்திலேயே நான் சூர்யாவின் மிகப்பெரிய ரசிகை. என்னுடைய அம்மா சூர்யாவின் தந்தை நடிகர் சிவகுமாருடன் மூன்று படத்தில் நடித்துள்ளார். நான் ஸ்கூல் படிக்கும் போது, சிவகுமாரின் மகன் சூர்யாவுடன் ஒரு நாள் கதாநாயகியாக நடிப்பேன் என்று கூறியிருந்தேன். அந்த ஆசை நீண்டநாள் இருந்தது. அது இன்று நிஜமாகியுள்ளது மகிழ்ச்சி. சூர்யா மிகவும் அமைதியானவர். அதிகம் பேசமாட்டார்.
செந்தில் உடன் நடித்தது, மறக்க முடியாத நல்ல அனுபவம். ரம்யா கிருஷ்ணன், எனது அம்மாவின் தோழி. சின்ன வயதிலிருந்தே அவரை தெரியும். பாகுபலி வெளியான நேரத்தில் அவங்களோடு நடித்தது எனக்கு சந்தோஷமாக இருந்தது. இயக்குநர் விக்னேஷ் சிவன், எனக்கு ஷூட்டிங் ஸ்பாட்டில் வைத்து தான் வசனத்தை கூறுவார். அதை நாங்கள் அங்கே டெவெலப் செய்து நடிப்போம். அப்படி நடிக்கும் போது அது சிறப்பாக இருக்கும் என்றார் கீர்த்தி சுரேஷ்.