ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகர் ரஜினிகாந்த், இரண்டாம் கட்டமாக தனது ரசிகர்களை கடந்த மூன்று நாட்களாக சந்தித்து வருகிறார். நேற்று நடந்த ரசிகர்கள் சந்திப்பில் ஒரு சுவாரஸ்ய நிகழ்வு நடந்தது.
புதுக்கோட்டையை சேர்ந்த குணசேகர் என்பவர், ரஜினியுடன் போட்டோ எடுக்க வந்தபோது போட்டோ எடுக்கமால் அவர் முன்பு நின்று வணங்கினார். ரஜினியை சுற்றி சுற்றி வந்தார். போட்டோகிராபர் போட்டா எடுக்க நில்லுங்கள் என்று கூறியபோது, நான் கடவுளைத்தான் பார்க்க வந்தேன், பார்த்து விட்டேன் என்று அவரை வணங்கியபடியே சில நிமிடங்கள் நின்றார்.
இவர் சிறுவயதில் இருந்தே ரஜினியின் தீவிர ரசிகர். அதுமட்டுமின்றி, இயக்குநர் ஷங்கரிடத்தில் கார் டிரைவராகவும் பணியாற்றி உள்ளார். ஷங்கர் இயக்கும் படங்களில் ரஜினி நடித்தபோது ரஜினியை சந்திக்க முடியும், என்றபோதும், அவரது ரசிகராக சந்திக்க வேண்டும் என்பதற்காக இப்போது ரசிகர் மன்றம் மூலமாக ரஜினியை தான் சந்தித்ததாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.