ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவுக்குப் பின் நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் பரபரப்பான பல கருத்துக்களை வெளியிட ஆரம்பித்தார். மாநில அரசியல், மத்திய அரசியல், சமூகப் பிரச்சனைகள் என பல தரப்பட்ட கருத்துக்களை அவருடைய டுவிட்டரில் பகிர்ந்து வந்தார். அதன்பின் அது பற்றிய விவாதங்களும், கண்டன அறிக்கைகளும் அரசியல் வட்டாரங்களில் அதிகம் வர ஆரம்பித்தன.
ஆனால், கடந்த ஒரு மாத காலமாக அரசியல் சார்ந்தோ, சமூக நலன் சார்ந்தோ எந்த ஒரு பதிவையும் அவர் டுவீட்டில் போடவில்லை. அமெரிக்காவில் 'விஸ்வரூபம் 2' படத்தின் இறுதிக்கட்டப் பணிகளில் அவர் பிஸியாக இருக்கிறார் என்று சொல்லப்பட்டது. சினிமா வேலைகளில் இறங்கினால், அப்போது அரசியல் வேலைகளை அவர் மறந்து விடுவாரா என கேள்விகளும் எழுந்தன. நாடே பரபரப்பாகக் கவனித்த ஆர்.கே. நகர் இடைத் தேர்தல் பற்றியோ, அதன் முடிவுகள் பற்றியோ எந்த ஒரு கருத்தையும் கமல்ஹாசன் முன் வைக்கவில்லை என்பது கவனிக்க வேண்டிய ஒன்று.
அரசியலில் இறங்குவேன் என்று வெளிப்படையாக அறிவித்த கமல்ஹாசன் இப்படி ஒரு இடைவெளியை ஏற்படுத்திக் கொண்டதற்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை. மீடியாக்களின் பரபரப்பிலும் கமல்ஹாசன் கடந்த ஒரு மாத காலமாக கவனத்தில் கொள்ளவில்லை.
கமல்ஹாசன் விட்ட இடைவெளியில் நேற்று முதல் ரஜினிகாந்த் பரபரப்பாகிவிட்டார். ஒரு வேளை ரஜினிகாந்த் டிசம்பர் 31ம் தேதி அவருடைய அரசியல் நிலையை அறிவித்த பின் கமல்ஹாசன் புத்தாண்டில் மேலும் பரபரப்பாக செயல்படுவாரோ ?.