ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
தமிழ்நாட்டின் முதல்வராகவும், அதிமுகவின் பொதுச் செயலாளர் ஆகவும் இருந்த ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மும்பையைச் சேர்ந்த பட நிறுவனம் திரைப்படமாக தயாரிக்க உள்ளது. படத்திற்கு 'தாய் - புரட்சித் தலைவி' என பெயரிட்டுள்ளனர். இப்படத்தை தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் தயாரிக்க உள்ளார்களாம். இப்படத்திற்காக ஒரு வருடத்திற்கும் மேலாக ஆராய்ச்சி செய்து பல தகவல்களைத் திரட்டியுள்ளார்கள்.
ஜெயலலிதா உயிருடன் இருந்த போதே அவரிடம் இது பற்றிய தகவலைத் தெரிவித்திருக்கிறார்கள். இது பற்றி பிறகு பேசலாம் என அவர் தெரிவித்ததாக படத்தைத் தயாரிக்க உள்ள தயாரிப்பாளர் ஆதித்ய பரத்வாஜ் தெரிவித்துள்ளார். படத்தின் பெரும்பான்மையான படப்பிடிப்பு மும்பையில் உள்ள ஸ்டுடியோக்களில் படமாக உள்ளதாம். ஜெயலலிதாவின் ஆரம்ப கால திரையுலக வாழ்க்கையைப் பற்றிய பகுதிகள் சென்னையில் படமாக்கப் போகிறார்களாம்.
ஜெயலலிதா கதாபாத்திரத்தில் யார் நடிக்கப் போகிறார்கள் என்பது பற்றியும் மற்ற விவரங்களையும் விரைவில் அறிவிக்க உள்ளார்கள். 2018 ஜனவரி மாதக் கடைசியில் 'தாய் - புரட்சித் தலைவி' படம் ஆரம்பமாக உள்ளது.