மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
ரஜினியை, பைரவா படத்தின் மூலம் ஹீரோவாக்கியவர் தயாரிப்பாளர் கலைஞானம். இவர், ரஜினி ரசிகர்கள் உடனான சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது பேசிய கலைஞானம்,
எந்த முடிவையும் ஆழ்ந்து யோசித்து முடிவெடுப்பவர் ரஜினி. அவர் முடிவெடுத்துவிட்டால் அதிலிருந்து எப்போதும் பின்வாங்க மாட்டார். ரஜினி வீட்டில் தற்போது சுக்ரன் உச்சத்தில் அமர்ந்து உள்ளார். அவருக்கு இனி எல்லாம் நல்ல காலம் தான். அதிர்ஷ்டம் வரும்போது யாரும் குறுக்கே நிற்க முடியாது. அருணாச்சலம் படத்தில் என்னையும் ஒரு தயாரிப்பாளராக்கியவர் ரஜினி. அந்தளவுக்கு நல்ல மனிதர். அவரின் ரசிகர்களுக்கு என் வாழ்த்துக்கள்.
இவ்வாறு கலைஞானம் பேசினார்.