சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
சந்தானம், சிவகார்த்திகேயன், மா.கா.பா. ஆனந்த் ஆகியோர் சின்னத்திரையிலிருந்து சினிமாவுக்கு வந்து ஹீரோவானவர்கள். சரணவன் மீனாட்சி செந்தில், பிரஜன் உள்ளிட்ட சிலர் சினிமாவில் ஹீரோவாக ஆனாலும் தாக்குபிடிக்க முடியாமல் மீண்டும் சின்னத்திரைக்கே சென்று விட்டார்கள். தற்போது சின்னத்திரையிலிருந்து பெரியதிரை ஹீரோவாகி இருப்பவர் லொள்ளுசபா ஜீவா.
எந்திரன் உள்பட பல படங்களில் ரஜினிக்கு டூப்பாக நடித்தவர். வேகம், குருவி, அலிபாபா, நினைத்தாலே இனிக்கும், கண்டேன் காதலை, மதராச பட்டினம், ஜம்புலிங்கம் 3டி படங்களில் முக்கிய காமெடியனாக நடித்தார். தற்போது கொம்பு படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக திஷா பாண்டே நடிக்கிறார். இவர்கள் தவிர பாண்டியராஜன், கஞ்சா கருப்பு, அஸ்மிதா, காயத்ரி உள்பட பலர் நடிக்கிறார்கள்.
தனியான ஒரு வீட்டில் ஒரு பெண் மர்மமாக கொல்லப்படுகிறார்கள், அதை கண்டுபிடிக்க ஜீவா தலைமையில் 5 பேர் செல்கிறார்கள், அவர்களுக்கு ஏற்படும் திகில் அனுபவங்கள் தான் படம். இதன் இறுதிகட்ட பணிகள் நடந்து வருகிறது. சந்தானம், சிவகார்த்திகேயன் வரிசையில் ஜீவாவும் ஹீரோவாக ஜெயிப்பரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.