ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தென்னிந்தியாவின் முன்னணி நடிகை பாவனா. மலையாள நடிகையான பாவனா, தமிழில் சித்திரம் பேசுதடி, ஜெயம் கொண்டான், அசல், தீபாவளி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். பாவனா கன்னட படங்களில் நடித்தபோது கன்னட தயாரிப்பாளரும், கேரளாவைச் சேர்ந்த தொழில் அதிபருமான நவீனை காதலித்தார். இரண்டு வருட காதலுக்கு பிறகு இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். ஆரம்பத்தில் காதலுக்கு எதிர்பாக இருந்த நவீன் குடும்பத்தினர் பின்னர் ஒப்புக் கொண்டனர்.
இந்த நிலையில் பாவனா வாழ்க்கையில் சில எதிர்பாராத நிகழ்வுகள் நடந்தது. அந்த நேரத்தில் பாவனாவுக்கு பக்க பலமாக இருந்து அவருக்கு ஆறுதல் அளித்தது நவீன் தான். அவரை சகஜநிலைக்கு கொண்டு வரும் பொருட்டு திருமண நிச்சயதார்த்தத்தையும் நடத்தினார். நிச்சயதார்த்தின் போது டிசம்பர் மாதம் 22ம் தேதி திருமணம் நடத்துவது என்று முடிவு செய்தனர். ஆனால் சில காரணங்களால் திருமணம் தள்ளிப்போனது. அதுவே பல யூகங்களுக்கு வழிவகுத்தது.
இந்த நிலையில் பாவனாவின் திருமணம் வருகிற ஜனவரி மாதம் 22ம் தேதி நடக்க இருக்கிறது. திருச்சூரில் நடக்கும் இந்த திருமணத்தில் உறவினர்கள், நண்பர்கள் மட்டும் கலந்து கொள்கிறார்கள். அதன்பிறகு கொச்சியில் நடக்கும் வரவேற்பு நிகழ்ச்சியில் திரையுலகினர் கலந்து கொள்கிறார்கள். திருமண தேதியை பாவனா முறைப்படி அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.