ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகை அமலா பால் ஒரு கோடிக்கும் கூடுதலான மதிப்புள்ள சொகுசு காரை வாங்கி, அதனை போலி முகவரி கொடுத்து புதுச்சேரியில் பதிவு செய்து 20 லட்சம் ரூபாய் வரை வரிஏய்ப்பு செய்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக எர்ணாகுளம் போக்குவரத்து அதிகாரிகள் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்துள்ளனர்.
இந்த புகார் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். அமலாபால் நேரில் ஆஜராகி இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். நேற்று ஆஜராகியிருக்க வேண்டிய அமலாபால் ஆஜராகவில்லை.
இந்த நிலையில் தான் கைது செய்யப்பட வாய்ப்பிருப்பதால் முன்ஜாமீன் கேட்டு கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
நான் இந்தியா முழுவதும் நடக்கும் படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறேன். ஓட்டலில் தங்குவதை தவிர்க்க நான் அடிக்கடி செல்லும் ஊர்களில் வாடகைக்கு வீடு எடுத்திருக்கிறேன். புதுச்சேரியில் உள்ள எனது வாடகை வீட்டின் முகவரியில் தான், நான் எனது காரை புதுச்சேரியில் பதிவு செய்திருக்கிறேன். அந்த காரை பெரும்பாலும் பெங்களூர், சென்னை, புதுச்சேரி பகுதிகளில் தான் அதிகமாக பயன்படுத்தி வருகிறேன். எனவே கேரளாவில் வரி செலுத்த வேண்டும் என்று என்னை கட்டாயப்படுத்துவதை ஏற்க முடியாது. இது தொடர்பாக நான் கைது செய்யப்படாமல் இருக்க முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று அந்த மனுவில் அமலாபால் கூறியிருக்கிறார். இந்த மனுமீதான விசாரணை அடுத்த வாரம் நடக்கிறது.