ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
சமீபகாலமாக சினிமா தணிக்கை அதிகாரிகள் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. வடக்கில் பத்மாவதி முதல் தெற்கில் மெர்சல் வரை இந்த பிரச்னை நடந்தது. தணிக்கை அதிகாரி அலுவலகம் முன்பு போராட்டங்களும் நடந்தது. பாரபட்சமாக செயல்படுவதாகவும், பணம் வாங்கிக் கொண்டு செயல்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் இந்தியா முழுவதும் 7 தணிக்கை அதிகாரிகள் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை, தணிக்கை அதிகாரியாக இருந்து மதியழகன் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக லீலா மீனாட்சி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் டில்லி தூர்தர்ஷனில் பப்ளிக் டிவிஷனல் பணியாற்றி வந்தவர். இதேப்போல சாம்ராட் பண்டோபாத்யாயா கோல்கட்டா அதிகாரியாகவும், குருபிரசாத் பெங்களூரு அதிகாரியாகவும், கர்மார்கர் துஷ்சார் மும்பை அதிகாரியாகவும், வி.பார்வதி திருவனந்தபுரம் அதிகாரியாகவும், சுபஸ்ரீ மஹாபத்ரா சட்டாக் அதிகாரியாகவும், ரகுல் கோவில்கர் ஐதராபாத் அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். ஒரே நேரத்தில் இத்தனை அதிகாரிகள் மாற்றப்பட்டிருப்பது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.