Advertisement

சிறப்புச்செய்திகள்

சூர்யா 46வது படத்தின் டிஜிட்டல் உரிமம் இத்தனை கோடியா? | கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் - வெள்ளிவிழா ஆண்டில் ரீரிலீஸ் அறிவிப்பு | பிளாஷ்பேக்: இயக்குநர் பி ஆர் பந்துலுவின் 'டூப்'பாக சாண்டோ சின்னப்ப தேவர் நடித்த “திலோத்தமா” | மோகன்லால் தான் எனக்கு எல்லாமே ; 'தொடரும்' பட வில்லன் நெகிழ்ச்சி | ஜனவரியில் வசூலை அள்ளிய படம்.. மே தினத்தில் போனஸ் அனுப்பி குஷிப்படுத்திய தயாரிப்பாளர் | ஒரே நேரத்தில் 3 ஸ்டார் படங்கள்: டான் பிக்சர்ஸ் ஆகாஷ் பாஸ்கரன் யார் தெரியுமா? | சினிமாவில் ஜெயிக்க பொறுமை மிக முக்கியம்: நடிகை சாந்தினி 'பளீச்' | நல்ல நேரம், புலன் விசாரணை, ஜெயிலர் - ஞாயிறு திரைப்படங்கள் | இரண்டாவது திருமணமா? : வதந்திக்கு மேக்னா ராஜ் கொடுத்த விளக்கம் | 10 வருடங்களுக்குப் பிறகு சிம்பு, சந்தானம் கூட்டணி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

காசுக்காக மாரடிக்கும் கூட்டம்: சேரன் காட்டம்!!

21 பிப், 2012 - 01:42 IST
எழுத்தின் அளவு:

  சிவாஜி நடித்த கர்ணன், உத்தமபுத்திரன், தில்லான மோகனம்பாள் போன்ற படங்களை பார்த்து விட்டு, இப்ப வரும் படங்களை பார்க்கும் போது ரொம்ப வேதனையாக இருக்கிறது. காசுக்காக மாரடிக்கும் கூட்டமாக சினிமா மாறிவிட்டது என்று காட்டமாக பேசி இருக்கிறார் டைரக்டர் சேரன்.

1964-ல் ஆர்.பி.பந்தலு இயக்கி, தயாரித்த மாபெரும் வெற்றி பெற்ற சரித்திர படம் கர்ணன். இப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், முத்துராமன், அசோகன், என்.டி.ராமாராவ், நம்பியார், சாவித்திரி, தேவிகா உள்ளிட்ட ஏகப்பட்ட திரை ஜாம்பவான்கள் நடிப்பில் வெளியான இப்படம், பாரத பொக்கிஷமாக கருதப்படும் சிவாஜியின் பல படங்களுள் மகாபாரத கம்பீரத்தை, சிவாஜியின் சிம்ம குரலோடு ஒலித்த கர்ணன் படமும் ஒன்று. விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில், கண்ணதாசன் வரிகளில் பாடல்கள் அனைத்தும் பெரிதும் பேசப்பட்டது. இப்போது இந்தபடம் மீண்டும் புதுப்பொலிவுடன் உருவாகி, விரைவில் வெளிவர இருக்கிறது.

இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இயக்குநர் சேரன், விழாவில் ரொம்பவே உணர்ச்சி ‌பொங்க பேசினார். அவர் பேசியதாவது, சிவாஜியை பார்த்து சினிமாவுக்கு வந்தவர்கள் பலர். அவர்களில் நானும் ஒருவன். சிறு வயதில் மதுரையில், தியேட்டர்களில் படம் பார்க்க பலமுறை அம்மாவிடம் அனுமதி வாங்கி அவர் நடித்த படங்களை கையில் சூடம் ஏற்றி பார்த்திருக்கிறேன். அவர் வீட்டில் ஒரு வேலைக்காரனாக, அவர் கை, கால்களை அமுக்கிவிடும் ஒரு சேவகனாக போக ஆசைப்பட்டவன் நான். அவ்வளவு வெறி பிடித்த ரசிகர்களில் நானும் ஒருவன். அவர் படங்களை பார்த்துவிட்டு, இப்ப வரும் படங்களை பார்க்கும் போது ரொம்ப வேதனையாக இருக்கிறது. காசுக்காக மாரடிக்கும் கூட்டமாக சினிமா மாறிவிட்டது. பில்லா, மாப்பிள்ளை, கழுதை குதிரைன்னு எல்லாம் படம் எடுக்கிறாங்க. யாருக்காச்சும் சிவாஜி நடித்த கர்ணன், உத்தமப்புத்திரன், தில்லான மோகனம்பாள் போன்ற படங்களை எடுக்க தைரியம் இருக்கா...?

பிழைப்பு நடத்த சினமாவுல இருந்தாலும், சினிமாவுக்காக வாழ்ந்தவர் நடிகர் சிவாஜி. நீங்க ஏன் அரசியலில் அவரை கொண்டு வரலன்னு எனக்கு கவலையா இருக்கு. அவரை தோற்கடிக்க தஞ்சாவூரில் என்னென்னமோ செய்தார்கள். உண்மை உங்களுக்கு பிடிக்காது, பொய் பித்தலாட்டம், நேர்மை இல்லாமை இதெல்லாம் தான் உங்களை நம்ப வச்சது, அவரை தோற்கடிச்சிட்டீங்க. ஏன்...? நாம சிவாஜியை ஆட்சி பண்ண சொல்லலியேன்னு ஒரு நாள் வருத்தப்படுவீங்க. சிவாஜி சார் வீட்டுல இருக்கிற ஒவ்வொரு பொருளும் ஒரு பொக்கிஷம். அவருடைய கை கரைபடியாத சுத்தமான கை. கைநீட்டி யார்கிட்டேயும் காசு வாங்கல, யாருக்கும் சிபாரிசு பண்ணல, ஆனால் அவரை நம்ம சரியாக பயன்படுத்தல. இங்க இருக்கும் எல்‌லாருக்கும் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். தயவு செய்து இனி சிவாஜி நடித்த படங்களின் தலைப்பை யார்க்கும் கொடுக்காதீங்க, அப்படி வர படங்களை பார்க்கும் போது ரொம்ப அசிங்கமா இருக்கு. அவர் நடித்த படங்களின் தலைப்பை பயன்படுத்த யாருக்கும் தகுதியில்லை என்று நினைக்கிறேன்.

எவ்வளவு பெரிய கலைஞன் அவர். அவரை இன்னும் ஒருபடி மேல போய் சிந்தித்தால், அவருக்குன்னு ஒரு பல்கலைக்கழகம் தொடங்கி அவரது படங்களை பாதுகாத்து, அடுத்த தலைமுறையினருக்கும், புதிதாக நடிக்க வருபவர்களுக்கும் போட்டு காண்பிக்க வேண்டும் என்று உணர்ச்சியோடு பேசிய சேரன், தன்னுடைய ஆசையையும் மேடையில் வெளிப்படுத்தினார். அதாவது, எனக்கு புதியபறவை படத்தை திரும்ப எடுக்கும் வாய்ப்பு கொடுத்தால், நானும் சிவாஜி சார் படத்தில் வேலை பார்த்தேன் என்ற பெருமை அவரது ரசிகனான எனக்கு கிடைக்கும் என்று கூறினார். 

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in