ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
2015-ம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் விஷால் தலைமையிலான அணி மாபெரும் வெற்றி பெற்றதும், அதன் பிறகு முன்னாள் நிர்வாகிகள் பெரும் ஊழலில் ஈடுபட்டிருப்பதாக குற்றம் சாட்டி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முயற்சித்தனர் புதிய நிர்வாகிகள். இதை எதிர்த்து முன்னாள் செயலாளர் ராதாரவி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் முன்னாள் நிர்வாகிகள் மீதான நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதித்தது. அதோடு வழக்கு முடியும் வரை யார் மீதும் நடவடிக்கை எடுக்க மாட்டோம் என்று விஷால் தரப்பில் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு மாறாக ராதாரவி உள்ளிட்ட சிலர் நடிகர் சங்கத்திலிருந்து நீக்கப்பட்டனர். இது நீதிமன்ற அவமதிப்பு என்று ராதாரவி வழக்கு தொடர்ந்தார். இதுகுறித்து நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு விஷாலுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்றம் குறிப்பிட்டபடி நேற்று விஷால் ஆஜராகவில்லை. அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டிருப்பதாகவும் வருகிற 21ந் தேதி (நாளை) அவர் ஓய்வெடுக்க வேண்டும் என்ற டாக்டர்கள் கூறியிருப்பதாகவும் அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். அதனை ஏற்ற நீதிமன்றம் வழக்கை வருகிற 22ந் தேதி (நாளை மறுநாள்) ஒத்தி வைத்து அன்றைக்கு விஷால் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்ற உத்தரவிட்டது.