ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
திரையுலகத்தில் ரசிகர்களின் பாராட்டு, வரவேற்பை விட ரஜினிகாந்தின் வரவேற்பையும், பாராட்டையும் பெரிதாக நினைப்பார்கள். அதிலும் புதுமுகங்களின் படம் என்றால் கேட்கவா வேண்டும். அப்படி ஒரு பாராட்டை 'அருவி' படத்திற்காக ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
'அருவி' படத்தைப் பார்த்த ரஜினிகாந்த் படத்தின் இயக்குனர் அருண் பிரபு புருஷோத்தமனுக்கு தொலைபேசியில் அழைத்து பாராட்டைத் தெரிவித்திருக்கிறார். ரஜினிகாந்தின் பாராட்டால் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளார்கள்.
படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, “இங்கும், அங்கும், எங்கும் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி,” என்று மகிழ்ந்துள்ளார். இயக்குனர் அருண் பிரபு, “உச்சம் தொடும் அன்பின் கொடி. ஆம். ஒரு தொலைபேசி அழைப்பு. திரு.ரஜினிகாந்த் அவர்களிடமிருந்து, மகிழ்ச்சி, மகிழ்ச்சி, மகிழ்ச்சியோ மகிழ்ச்சி,” என பேரானந்தம் அடைந்துள்ளார். படத்தின் நாயகி அதிதி பாலன், ”ரஜினிகாந்த் அருவி படக்குழுவினரைப் பாராட்டியதன் உற்சாகம் தாங்கவில்லை,” என ஆனந்தப்பட்டிருக்கிறார்.
ரஜினிகாந்த் மட்டுமல்ல திரையுலகத்தைச் சார்ந்த பலரும் 'அருவி' படத்தைப் பாராட்டி வருகிறார்கள். அதே சமயம், சமூக வலைத்தளங்களில் படம் பற்றி பலமான கருத்துப் பரிமாற்றங்களும் நடந்து வருகிறது. திருநங்கைக்கு முக்கியமான கதாபாத்திரம் கொடுத்திருந்தாலும் அவர்களை கேவலப்படுத்தும் விதத்தில் சில ஆபாசமான வசனங்கள் படத்தில் உள்ளன. தேவையே இல்லாமல் டிவி நிகழ்ச்சியை வெகுவாகக் கிண்டலடித்திருக்கிறார்கள் என்றும் பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அதோடு, 'அருவி' படம் 'அஸ்மா' என்ற எகிப்திய படத்தைப் பார்த்து காப்பியடிக்கப்பட்டது என்றும் சர்ச்சை எழுந்துள்ளது.