அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு |
சென்னை 28, தோழா, ராமன் தேடிய சீதை உள்பட பல படங்களில் நடித்தவர் நிதின் சத்யா. தற்போது சேவத் என்ற ஒரு தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி அதன் மூலம் ஜருகண்டி என்ற படத்தை தயாரித்து வருகிறார். இதில் ஜெய் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ரெபா மோனிகா ஜான் நடிக்கிறார். இவர்களுடன் ரோபோ சங்கர், இளவரசு, காவ்யாஷா நடிக்கிறார்கள். அமித் குமார் திவாரி வில்லனாக நடிக்கிறார். போபோ சஷி இசை அமைக்கிறார், அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார். பிச்சுமணி இயக்குகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 30 சதவிகித படப்பிடிப்புகள் முடிந்துள்ள நிலையில் படத்தின் ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணா திடீரென படத்திலிருந்து விலகி உள்ளார். சம்பள பிரச்னை காரணமாக விலகியதாகவும், அரவிந்த் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு இயக்குனருக்கு திருப்தியாக அமையவில்லை என்பதால் விலக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் இதுபற்றி கருத்து தெரிவிக்க மறுத்துவிட்ட தயாரிப்பாளர் நிதின் சத்யா "திட்டமிட்டபடியே எங்கள் படப்பிடிப்பு துல்லியமாக நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. எங்களது படப்பிடிப்பு குழுவில் புதிதாக இணைந்து உள்ள ஒளிப்பதிவு இயக்குனர் ஆர்.டி.ராஜசேகரின் அனுபவமும், திறமையும் எங்களை போன்ற இளைஞர்களை ஊக்குவிக்கும். அவரது தொழில்நுட்பம் உலக தரத்துக்கு இணையானது. அதுவே எங்களுக்கு பெருமை" என்று மட்டும் கூறுகிறார்.