ஆற்றில் குப்பையை கொட்டியதற்காக பிரபல பாடகருக்கு 25000 ரூபாய் அபராதம் | கடனை திருப்பி கேட்டதால் என் மீது புகார் : நாத்தனார் மீது பதில் வழக்கு தொடர்ந்த ஹன்சிகா | திரிஷா போன்ற அமெரிக்கா பெண் ஒருவர் என் மீது காதல் வயப்பட்டார் : நடிகர் பாலா புது தகவல் | எம்புரான் படத்திற்கு எந்த அரசியல் அழுத்தமும் தரப்படவில்லை : சுரேஷ் கோபி | நடிகையை கடத்தி துன்புறுத்த திலீப் தான் பணம் கொடுத்தார் : முதல் குற்றவாளி பல்சர் சுனில் பரபரப்பு பேச்சு | குட் பேட் அக்லி டிரைலர் வெளியானது : நிச்சயம் அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டமே...! | ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! |
தமிழ் சினிமாவின் முதல் வண்ணப்படம் எனது என்று கேட்டால் எல்லோரும் சொல்வது அலிபாபாவும் 40 திருடர்களும் என்பர்கள். ஆனால் உண்மை அதுவல்ல. தமிழ் சினிமாவின் முதல் வண்ணப்படம் தர்மபுரி ரகசியம். இதற்கு ராஜதுரோகி என்று இன்னொரு பெயரும் உண்டு. அலிபாபாவும் 40 திருடர்களும் படம் வெளிவந்தது 1956. தர்மபுரி ரகசியம் வெளிவந்தது 1938. அதாவது அலிபாபாவுக்கு 18 வருடங்களுக்கு முன்பே தர்மபுரி ரகசியம் வெளிவந்து விட்டது.
அலிபாபாவுக்கும், தர்மபுரி ரசிசியத்துக்கு வித்தியாசம் என்ற வென்றால். தர்மபுரி ரகசியம் சிபியா வண்ணத்தில் வெளிவந்தது. அலிபாபா அதற்கு அடுத்த கட்டமான கேவா கலரில் வெளிவந்தது. இயற்கை வண்ண காட்சிகள் அடங்கிய முதல் தமிழ் படம் என்று தர்மபுரி ரகசியம் படத்துக்கு விளம்பரம் செய்திருந்தார்கள்.
தமிழ்நாடு டாக்கீஸ் சார்பாக எஸ்.சவுந்தர்ராஜன் இந்தப் படத்தை இயக்கி இருந்தார், அண்ணாஜிராவ் கதாநாயகனாக நடித்திருந்தார். திருவாங்கூர் சமஸ்தானத்தை விமர்சித்து எடுக்கப்பட்ட இந்தப் படத்துக்கு திருவாங்கூர் சமஸ்தானம் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.