நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

தமிழ் சினிமாவின் முதல் வண்ணப்படம் எனது என்று கேட்டால் எல்லோரும் சொல்வது அலிபாபாவும் 40 திருடர்களும் என்பர்கள். ஆனால் உண்மை அதுவல்ல. தமிழ் சினிமாவின் முதல் வண்ணப்படம் தர்மபுரி ரகசியம். இதற்கு ராஜதுரோகி என்று இன்னொரு பெயரும் உண்டு. அலிபாபாவும் 40 திருடர்களும் படம் வெளிவந்தது 1956. தர்மபுரி ரகசியம் வெளிவந்தது 1938. அதாவது அலிபாபாவுக்கு 18 வருடங்களுக்கு முன்பே தர்மபுரி ரகசியம் வெளிவந்து விட்டது.
அலிபாபாவுக்கும், தர்மபுரி ரசிசியத்துக்கு வித்தியாசம் என்ற வென்றால். தர்மபுரி ரகசியம் சிபியா வண்ணத்தில் வெளிவந்தது. அலிபாபா அதற்கு அடுத்த கட்டமான கேவா கலரில் வெளிவந்தது. இயற்கை வண்ண காட்சிகள் அடங்கிய முதல் தமிழ் படம் என்று தர்மபுரி ரகசியம் படத்துக்கு விளம்பரம் செய்திருந்தார்கள்.
தமிழ்நாடு டாக்கீஸ் சார்பாக எஸ்.சவுந்தர்ராஜன் இந்தப் படத்தை இயக்கி இருந்தார், அண்ணாஜிராவ் கதாநாயகனாக நடித்திருந்தார். திருவாங்கூர் சமஸ்தானத்தை விமர்சித்து எடுக்கப்பட்ட இந்தப் படத்துக்கு திருவாங்கூர் சமஸ்தானம் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.