ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ்த் திரையுலகம் டிஜிட்டல் சினிமாவிற்கு மாறிய பிறகு கடந்த சில வருடங்களாக ஒவ்வொரு வருடமும் வெளிவரும் படங்களின் எண்ணிக்கை 200ஐ தாண்டி வருகிறது. இந்த ஆண்டிலும் அந்த எண்ணிக்கை 200ஐ தாண்ட உள்ளது. 200 படங்கள் வந்தாலும் 20 படங்களாவது நல்ல படங்களாக வந்ததா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது. சுமார் 10 படங்கள்தான் வசூல் ரீதியாகவும், வரவேற்பு ரீதியாகவும் நல்ல படங்கள் என்ற பெயரைப் பெறுகிறது.
இந்த ஆண்டில் ஆச்சரியப்படும் வகையில் கடந்த நான்கு வாரங்களில் வெளிவந்த 25 படங்களில் அறம், தீரன் அதிகாரம் ஒன்று, அருவி ஆகிய படங்கள் ரசிகர்களிடமும், விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளன. அடுத்தடுத்து மிகச் சிறந்த படங்களைப் பார்ப்பது தமிழ் சினிமா எதிர்காலத்தில் இன்னும் மேம்படும் என்ற நம்பிக்கையைக் கொடுத்துள்ளது. அதிலும் அறம், அருவி ஆகிய படங்கள் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலே குறிப்பிடப்பட்ட மூன்று படங்களும் இந்த ஆண்டின் டாப் 10 படங்களின் பட்டியலில் கண்டிப்பாக இடம் பெறும் வாய்ப்புள்ளது.
வித்தியாசமான படங்களைக் கொடுக்கும் தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும், அப்படிப்பட்ட படங்களில் நடிக்க முடிவெடுக்கும் நடிகர்களும் இன்னும் அதிகமானால் தமிழ் சினிமா தலை நிமிரும் என்பது உறுதி.