ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
சூர்யா நடிப்பில் விக்னேஷ் சிவன் டைரக்சனில் பொங்கலுக்கு வெளியாக இருக்கும் படம் 'தானா சேர்ந்த கூட்டம்'. இந்தப்படத்திற்காக திருவனந்தபுரத்தில் சூர்யாவின் ரசிகைகளுக்காக சிறப்பு காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான டிக்கெட் விற்பனையும் துவங்கியுள்ளது. இந்தியாவிலேயே முதன்முறையாக பெண் ரசிகைகள் சிறப்பு காட்சி திரையிடப்படுவது சூர்யாவின் படத்திற்குத்தான் என போஸ்டருடன் விளம்பரம் வெளியாகியுள்ளது.
ஆனால் இதற்கு முன்பே விஜய்யின் 'தெறி' படம் வெளியானபோது காரைக்குடி சத்யன் தியேட்டரில் பெண் ரசிகைகளுக்கென தனியாக காலை 7 மணி சிறப்பு காட்சியை ஏற்பாடு செய்திருந்தனர். அதேபோல வரும் கிறிஸ்துமஸ் பண்டிகையில் ரிலீஸாக இருக்கும் மம்முட்டி நடித்துள்ள, 'மாஸ்டர்பீஸ்' படத்திற்கு ஆழப்புழா மாவட்டத்தில் செங்கனூரில் உள்ள தியேட்டர் ஒன்றில் பெண் ரசிகைகளுக்கென தனியாக சிறப்பு காலை காட்சியை ஏற்பாடு செய்துள்ளனர்.
ஆக, சூர்யா படத்திற்கு முன்பே இரண்டு நடிகர்களின் படங்களுக்கு இப்படி ரசிகைகளுக்காக சிறப்பு காட்சி நடந்துள்ளதை இவர்கள் எப்படி கவனிக்காமல் விட்டார்கள்..?