ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட மனு செய்ததையொட்டி சங்கத்தின் துணை தலைவர் பொன்வண்ணன் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
"நடிகர் சங்கத்தில் அரசியல் இருக்க கூடாது என்கிற முடிவோடு தான் நடிகர் சங்கத்தில் போட்டியிட்டு துணை தலைவர் ஆனேன். விஷால் தேர்தலில் போட்டியிடுவது அவரது தனிப்பட்ட முடிவு என்றாலும். அந்த முடிவு எனக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்துகிறது. கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியவில்லை அதனால் ராஜினாமா செய்கிறேன்" என்ற பொன்வண்ணன் கூறியிருந்தார்.
பொன் வண்ணன் ராஜினாமாவை தொடர்ந்து நேற்று நடிகர் சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம் நடந்தது. இதில் பொன்வண்ணன் ராஜினாமாவால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்தின் முடிவில் சங்கத்தின் தலைவர் நாசர், செயலாளர் விஷால் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:
பொன்வண்ணன் ராஜினாமா செய்திருப்பது உண்மைதான். ஆனால் அந்த ராஜினாமாவை செயற்குழு ஏற்கவில்லை. ராஜினாமா முடிவை மறுபரிசீலனை செய்ய கேட்டிருக்கிறோம். அதற்கு கால அவகாசமும் கொடுத்திருக்கிறோம். அவர் எங்களுடன் இணைந்து தொடர்ந்து பணியாற்றுவார். மலேசிய கலை நிகழ்ச்சிகள் திட்டமிட்டபடி அனைவரின் ஒத்துழைப்போடும் நடக்கும். சங்கத்தில் வேறு சிலர் ராஜினாமா செய்ய இருப்பதாக வரும் தகவல்கள் வெறும் வதந்தி தான். என்றனர்.