ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சிவகார்த்திகேயன், பஹத் பாசில், நயன்தாரா இணைந்து நடித்துள்ள 'வேலைக்காரன்' படம் வரும் டிச-22ஆம் தேதி ரிலீஸாகிறது. அனிருத் இசையமைத்துள்ள இந்தப்படத்தை மோகன்ராஜா இயக்கியுள்ளார். இந்தப்படத்தின் கேரளா வெளியீட்டு உரிமையை பிரபலமான ஈ4 என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் மிகப்பெரிய விலைக்கு கைப்பற்றியுள்ளது.
சிவகார்த்திகேயன் படங்களுக்கு கேரளாவில் நல்ல மார்க்கெட் இருந்தாலும் கூட, இந்தப்படத்தை இன்னும் அதிக விலைக்கு வாங்கியதற்கு மிக முக்கியமான காரணங்கள் இதில் மலையாள நடிகர் பஹத் பாசிலும், நாயகியாக நயன்தாராவும் நடித்துள்ளது தான்.
மேலும் 'தனி ஒருவன்' படம் தந்த இயக்குனர் மோகன்ராஜாவின் படம் என்கிற எதிர்பார்ப்பும் இதில் சேர்ந்துள்ளது. இதே நிறுவனம் தான் மலையாளத்தில் பஹத் பாசில் நடித்த இரண்டு தேசிய விருது படங்களையும் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.