பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
சிவகார்த்திகேயன், பஹத் பாசில், நயன்தாரா இணைந்து நடித்துள்ள 'வேலைக்காரன்' படம் வரும் டிச-22ஆம் தேதி ரிலீஸாகிறது. அனிருத் இசையமைத்துள்ள இந்தப்படத்தை மோகன்ராஜா இயக்கியுள்ளார். இந்தப்படத்தின் கேரளா வெளியீட்டு உரிமையை பிரபலமான ஈ4 என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் மிகப்பெரிய விலைக்கு கைப்பற்றியுள்ளது.
சிவகார்த்திகேயன் படங்களுக்கு கேரளாவில் நல்ல மார்க்கெட் இருந்தாலும் கூட, இந்தப்படத்தை இன்னும் அதிக விலைக்கு வாங்கியதற்கு மிக முக்கியமான காரணங்கள் இதில் மலையாள நடிகர் பஹத் பாசிலும், நாயகியாக நயன்தாராவும் நடித்துள்ளது தான்.
மேலும் 'தனி ஒருவன்' படம் தந்த இயக்குனர் மோகன்ராஜாவின் படம் என்கிற எதிர்பார்ப்பும் இதில் சேர்ந்துள்ளது. இதே நிறுவனம் தான் மலையாளத்தில் பஹத் பாசில் நடித்த இரண்டு தேசிய விருது படங்களையும் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.