ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
'சதுரங்க வேட்டை' படத்தை இயக்கிய வினோத் இயக்கத்தில், கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங் மற்றும் பலர் நடிக்க நவம்பர் 17ம் தேதி வெளிவந்த படம் 'தீரன் அதிகாரம் ஒன்று'. வித்தியாசமான போலீஸ் விசாரணைப் படமாக அமைந்து விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. அதே போல ரசிகர்களாலும் படம் வெகுவாக ரசிக்கப்பட்டது. அந்த வரவேற்பு படத்தை 25வது நாளைக் கடக்க வைத்துள்ளது. இன்றுடன் 25வது நாளை வெற்றிகரமாகக் கடக்கிறது 'தீரன் அதிகாரம் ஒன்று'.
படத்தை வெளியிட்டு, நன்றி தெரிவிக்கும் சந்திப்பிலேயே படம் அதிகாரப்பூர்வமாக இணையதளத்தில் 28வது நாட்களுக்குப் பிறகு வெளியாகும் என படத் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு அறிவித்திருந்தார். அதன்படி இப்படம் அதிகாரப்பூர்வமாக டிசம்பர் 15ம் தேதி இணையதளத்தில் பார்ப்பதற்காக வெளியாக உள்ளது. அதற்கான டிஜிட்டல் உரிமையை சுமார் 4 கோடிக்கு விற்றுள்ளார்கள் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் வெளிவந்த படங்களில் டிஜிட்டல் உரிமையில் நல்ல விலைக்கு விற்கப்பட்ட படம் 'தீரன் அதிகாரம் ஒன்று' என்கிறார்கள்.
நல்ல கதையும், அதை வித்தியாசமாக சொல்லும் விதமும் இருந்தால் போதும் என்பதை 'தீரன் அதிகாரம் ஒன்று' படம் நிரூபித்துள்ளது.