சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
வி.கே.டி கிரியேசன்ஸ் சார்பில் டி.வேலு தயாரித்துள்ள படம் பள்ளி பருவத்திலே. பிரபல இசை அமைப்பாளர் சிற்பியின் மகன் நந்தன்ராம் ஹீரோவாக அறிமுகமாகிறார். வெண்பா ஹீரோயினாக நடிக்கிறார். இவர்கள் தவிர கே.எஸ்.ரவிகுமார், ஊர்வசி, தம்பி ராமய்யா, ஆர்.கே.சுரேஷ், பொன்வண்ணன் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். வினோத்குமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். விஜய் நாராயணன் இசை அமைத்துள்ளார். வாசுதேவ் பாஸ்கர் இயக்கி உள்ளார். வருகிற 15ந் தேதி படம் வெளிவருகிறது. இந்தப் படத்திற்கு தேசிய விருதும் கிடைக்கும் என்கிறார் வாசுதேவ் பாஸ்கர் அவர் மேலும் கூறியதாவது:
ஆரம்ப கால கட்டத்தில் இருந்தே நமக்கு சொல்லித் தரப்பட்ட ஒரு விஷயம் மாதா, பிதா, குரு, தெய்வம். அப்படிப்பட்ட மாதா பிதாவுக்கு அடுத்து குருவைத்தான் சொல்லிருக்காங்க அதுக்கு அடுத்து தான் தெய்வத்தையே சொல்லிருக்காங்க ஆரம்பக்காலத்துல இருந்து. மாணவ மாணவிகள் பெற்றோர்களுக்குப் பிறகு குருவான ஆசிரியர்களுடன் தான் அதிகம் இருந்திருக்கின்றோம். அப்படிப்பட்ட ஆசிரியர்கள் மாணவர்களை எப்படி வழி நடத்துகிறார்கள் என்பதைப் பொறுத்துத்தான் அந்த மாணவர்களின் எதிர்காலம் அமையும். அப்படிப்பட்ட கதைக்கருவை கொண்ட படம்.
ஒரு ஆசிரியரால் தான் ஒரு மாணவனின் வாழ்க்கை தரத்தை உயர்த்த முடியும் என்பதை இந்தப் படத்தில் கூறியுள்ளேன். இத்திரைப்படம் உலகில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் சமர்ப்பணம்மாக வெளியிடுகிறோம் . படத்தில் ஆசிரியாராக நடித்த கே.எஸ்.ரவிகுமார் இதுபோன்ற நல்ல படத்திற்கு சம்பளம் வாங்கக்கூட்£து என்று வாங்கிய சம்பளத்தை திருப்பிக் கொடுத்துவிட்டார். மற்ற நடிகர் நடிகைகள் தங்கள் சம்பளத்தை கணிசமாக குறைத்துக் கொண்டார்கள். ஏ.ஆர்.ரகுமான் படத்தை பார்த்து விட்டு மனதார பாராட்டினார்.
கிராமத்துக்கு சென்று எப்படி டாக்டர் சேவை செய்வதை பற்றி “தர்மதுரை” படத்தின் மூலம் கூறி தேசிய விருது பெற்றதோ அதுபோல், இத்திரைப்படமும் ஆசிரியர்கள் பற்றிய பெருமையை கூறி தேசிய விருது பெரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. என்றார் இயக்குனர் வாசுதேவ் பாஸ்கர்.