மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? |
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு இது. இதனை தமிழக அரசு பல மாதங்களாக கொண்டாடி வருகிறது. எம்.ஜி.ஆர் அரசியல்வாதி, முதல்வர் என்றாலும் அடிப்படையில் அவர் நடிகர். அவரது நூற்றாண்டு விழாவை மிக எளிமையாக கொண்டாடி முடித்துவிட்டது நடிகர் சங்கம். இப்போது எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் தமிழக அரசுக்கு திடீர் என நன்றி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பொன்மனச் செம்மலென்றும், மக்கள் திலகமென்றும், புரட்சி தலைவர் என்றும், வள்ளல் என்றும், வல்லவன் என்றும் தமிழக மக்களின் மனதிலும், வரலாற்றிலும் ஆழமாய் பதிந்த பெயர் எம்.ஜி.ஆர். வருடங்கள் ஆயிரம் கடந்தாலும் அன்றலர்ந்த மலர் போல அவர்தம் புகழ் ஜொலிக்கும். திரைப்படமாகட்டும், அரசியலாகட்டும், தொட்டதுறையெல்லாம் பொன்னாக்கிய மக்கள் மன்னன்.
எட்டாத இலக்கென்றாலும், எல்லா நடிகர்களுக்கும் கனவு நாயகன். தான் நலம் பெற்றது போல், தம் கலை சார்ந்த மற்றவர் வாழ்வும் உயரவேண்டுமென தென்னிந்திய நடிகர் சங்கத்தை உருவாக்கி பலம் பெற செய்தவர். அண்ணலவர் செய்த காரியம் இன்று பல்லாயிரம் கலைக் குடும்பந்தனில் ஒளி விளக்காய் மின்னுகிறது. அவர்தம் பூதவுடல் இயற்கையோடு கலந்து, கரைந்தாலும் அவர் செயல்களும் தர்மங்களும் காலம் கடந்து நிற்கும். அன்னாரது நூற்றாண்டு விழாவினை தமிழகமெங்கும் கொண்டாடும் தமிழக அரசிற்கு தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சிரந்தாழ்ந்த நன்றிகள் கோடி. இவ்வாறு நாசர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.