ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகர் அமீர் கானின் நடிப்பில் வெளியான இந்தி படம் டங்கல். இதில் அவரது மகளாக நடிகை ஜைரா வாசிம் நடித்திருந்தார். படத்தில் மல்யுத்த வீராங்கனையாக நடித்திருந்த இவர், இந்த படத்தில் நடித்ததற்காக ஜனாதிபதியிடம் இருந்து சிறந்த சாதனையாளருக்கான தேசிய குழந்தைகள் விருதும் பெற்றார்.
இவர் நேற்று (டிச.,09) டில்லியில் இருந்து மும்பை சென்ற ஏர் விஸ்தாரா விமானம் ஒன்றில் பயணம் செய்து உள்ளார். விமானம் நடுவானில் சென்று கொண்டு இருந்த போது நள்ளிரவில், பின் இருக்கையில் அமர்ந்திருந்த ஒருவர் கால்களால் ஜைராவிற்கு பாலியல் ரீதியில் தொல்லை கொடுத்துள்ளார். இதுபற்றி அழுதுகொண்டே, இன்ஸ்டாகிராமில் அவர் வீடியோவாக பதிவிட்டுள்ளார். இது மிக பயங்கரம் நிறைந்தது என்றும் அவர் கூறியுள்ளார். தனக்கு தொல்லை கொடுத்தவர் யார் என தெரியவில்லை எனவும் ஜைரா தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அவர், விமானத்தில் இருந்த ஒருவரும் தனது உதவிக்கு வரவில்லை. இதுவா சிறுமிகளை நீங்கள் கவனித்து கொள்ளும் விதம்? எங்களை போன்ற சிறுமிகளுக்கு உதவ யார் இருக்கின்றனர்? என அந்த வீடியோவில் அவர் தெரிவித்துள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருவதை அடுத்து, விமான நிறுவனம் ஜைராவின் பின்புறம் அமர்ந்திருந்தவர் பற்றிய விபரங்களை சேகரித்து வருகிறது.