ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஆர்கே.நகரில் யாரையும் நான் ஆதரிக்கவில்லை, எனது அடுத்தக்கட்ட அரசியல் நகர்வை விரைவில் அறிவிப்பேன் என விஷால் கூறியுள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திடீரென களமிறங்கி, வேட்பு மனு தாக்கல் செய்தார் விஷால். அவரின் வேட்புமனு பல்வேறு சர்ச்சைகளுடன் நிராகரிக்கப்பட்டது. இதை எதிர்த்து போராடி வருகிறார். இந்நிலையில் அவர் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில் கூறியிருப்பதாவது...
ஜனநாயகம் சிதைப்பு
ஆர்கே.நகர் இடைத்தேர்தலில் நான் போட்டியிட மனு தாக்கல் செய்தது எனது சுயசிந்தனையின் உந்துதலால் எடுத்த முடிவு. அந்த தொகுதி மக்களுக்கு பணியாற்றவே இந்த முடிவை எடுத்தேன். ஆனால் பவர் பாலிடிக்ஸ் எனும் ஆதிக்க அரசியல் சக்திகளால் ஜனநாயகம் சிதைக்கப்பட்டு என் மனு நிராகரிக்கப்பட்டது.
யாரையும் ஆதரிக்கவில்லை
எனக்கு நேர்ந்த அநீதிக்கு மக்கள் மன்றமே சாட்சி. என்னுடைய மக்கள் பணிகளும், ஜனநாயகத்தை மீட்டெடுக்கும் போராட்டமும் எப்போதும் தொடரும். நான் சிலரை ஆதரிப்பதாக செய்தி பரப்பப்படுகிறது. நான் யாரையும் இதுவரை சொல்லவில்லை, அப்படி ஒரு முடிவை எடுக்கவில்லை.
விரைவில் அரசியல் அறிவிப்பு
என்னுடைய போராட்டத்தில் துணை நின்ற ரசிகர்கள், பொதுமக்கள், பத்திரிகையாளர்கள், குரல் கொடுத்த தலைவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறேன். என்னுடைய அடுத்தக்கட்ட அரசியல் நகர்வை விரைவில் அறிவிப்பேன்.
மீனவர்கள் பிரச்னையை தீருங்கள்
இந்த நேரத்தில் ஆளும்கட்சிக்கு ஓர் கோரிக்கை... ஆர்கேநகர் தேர்தல் உங்களுக்கு முக்கியம் தான். ஆனால் அதைவிட கன்னியாகுமரியில் நடக்கும் மீனவர்கள் போராட்டமும், அவர்களின் வாழ்வாதாரமும் முக்கியம். நியாயமான கோரிக்கைகளுடன் போராடி வரும் மீனவர்களை உடனே சந்தித்து அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுங்கள். ஆர்.கே.நகர் மக்களும் இதை தான் எதிர்பார்க்கிறார்கள். இது உங்களுக்கு நல்ல பெயரை கொடுக்கும். மீனவர்கள் சார்பாகவும், ஆர்கேநகர் தொகுதி மக்கள் சார்பாகவும் இந்த கோரிக்கையை வைக்கிறேன்.
இவ்வாறு விஷால் கூறியுள்ளார்.