ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ரஜினிகாந்தின் பிறந்த நாளுக்கு இன்னும் சில நாட்களே உள்ளன. பிறந்த நாளை முன்னிட்டு ரஜினிகாந்த் அவரது ரசிகர்களை மீண்டும் மண்டபத்தில் சந்திப்பாரா என ரஜினிகாந்த் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், ரஜினிகாந்த் தரப்பிலிருந்து அது குறித்து இன்னும் எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.
விஷாலின் திடீர் அரசியல் களம், கமல்ஹாசனின் சமீபத்திய திடீர் மவுனம் இவற்றிற்கு எல்லாம் ஏதோ ஒரு காரணம் இருக்கிறது என சாமானிய மக்கள் யோசித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். பரபரப்பை ஏற்படுத்துவார் என நினைக்கப்படுபவர்கள் அமைதியாக இருப்பதும், எதிர்பாராத சிலர் அரசியல் களத்தில் குதித்து பரபரப்பை ஏற்படுத்துவதும் திரையுலகத்திலும் பல அதிர்ச்சிகளை ஏற்படுத்தியுள்ளது.
ரஜினிகாந்த் அவருடைய அரசியல் நிலவரம் குறித்து என்ன சொல்லப் போகிறார் என அவருடைய ரசிகர்கள் மட்டுமல்லாது, அரசியல் களத்திலும் பல கட்சிகள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றன.
ரஜினிகாந்தின் அரசியல் அறிவிப்புக்கு இதுவே சரியான தருணம் என பலரும் கருதி வருகிறார்கள். இந்த வருடப் பிறந்த நாளில் அந்த அறிவிப்பை வெளியிடாமல் ரஜினிகாந்த் தள்ளிப் போட்டால், இதை விட மீண்டும் ஒரு சிறந்த தருணம் வருமா என்பதும் சந்தேகம் தான். என்ன செய்யப் போகிறார் ரஜினி?, என அடுத்த சில நாட்களில் அவர் மீதான கவனம் இன்னும் அதிகமாகுமா அல்லது அவருடைய பிறந்த நாள் அமைதியாகக் கடந்து போகுமா ?.