ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
ஆர்கே.நகர் தேர்தல் அலுவலர் வேலுச்சாமியை நடிகர் விஷால் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஷால், நான் தேர்தல் அலுவலரை மிரட்டினேனாம். அதனால் தான் அவர் ஒப்புக் கொண்டதாக சொல்கிறார். ஒரு தேர்தல் அதிகாரியை நான் எப்படி மிரட்ட முடியும்.
நான் மிரட்டினேனா இல்லையா என்பது அங்கிருக்கும் கேமராவில் பதிவாகி இருக்கிறது. ஏற்கனவே அங்கு என்ன நடந்தது என்ற வீடியோக்கள் எல்லாம் வெளியாகி உள்ளது. அடுத்ததாக இந்திய தேர்தல் ஆணையத்தை சந்திக்க உள்ளேன். என்னை முன்மொழிந்தவர்கள் வீட்டிற்கு வெளியே யார் யாரோ பாதுகாப்பிற்கு நிற்கிறார்கள். அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. இதை நான் விடுவதாக இல்லை. இந்திய தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்.
நான் தேர்தலில் நிற்கவில்லை என்பது முடிவாகிவிட்டது. இப்போது சொல்கிறேன், தேர்தலில் நிற்காமல், அந்த தொகுதி மக்களுக்கு என்னென்ன நல்லது செய்ய வேண்டுமோ அதை நான் செய்வேன் என்று ஆவேசமாய் பேசி அந்த இடத்தை விட்டு கிளம்பினார்.