ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சென்னை : என்னை முன்மொழிந்தவர்களை காணவில்லை, அவர்களை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை என விஷால் தெரிவித்துள்ளார்.
ஆர்கே.நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் களமிறங்கி, வேட்பு மனு தாக்கல் செய்தார். ஆனால் அவரது வேட்பு மனு பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே நிராகரிக்கப்பட்டது. மாலை 3 மணிக்குள், தேர்தல் அலுவலரை சந்தித்து, விஷாலை முன்மொழிந்ததாக சொல்லப்பட்டு, பின்னர் அவர்கள் முன்மொழியவில்லை என்று கூறப்பட்ட அந்த இரண்டு நபர்களும் நேரில் விளக்கம் அளித்தால் அவரது மனு மறுபரிசீலனை செய்யப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
இந்நிலையில், சென்னை தேர்தல் ஆணையம் அலுவலகம் வந்த விஷால் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் பேசியதாவது... என்னை முன்மொழிந்த சுமதி, தீபன் இருவரும் எங்கிருக்கிறார்கள் என்றே தெரியவில்லை, அவர்களை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. இப்போது என் மனு ஏற்பதை விட அவர்களின் பாதுகாப்பு தான் ரொம்ப முக்கியம். இதுதொடர்பாக போலீசில் புகார் அளிக்க உள்ளேன் என்றார்.
சினிமாவை மிஞ்சும் அளவுக்கு ஆர்.கே.நகரில் விஷால், பரபரப்பு தொற்றி கொண்டுள்ளது. இதன்மூலம் விஷால், அந்த இரண்டு பேரையும் 3மணிக்குள் ஆஜர்படுத்துவது என்பது கடினம். ஆகையால் அவரது மனு நிராகரிக்கப்பட்டது நிரகாரிக்கப்பட்டது தான். அவர் போட்டியிடுவதற்காக இருந்த ஒரு வாய்ப்பும் கைநழுவி போய் கொண்டு இருக்கிறது.