ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
என் நாட்டை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என்று நடிகர் விஷால் கூறியுள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் களமிறங்கி வேட்பு மனு தாக்கல் செய்தார். ஆனால் அவரது வேட்பு மனு பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே நிராகரிக்கப்பட்டது. இதை எதிர்த்து தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். தனக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று பேட்டியளித்து வருகிறார். இதுதொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியையும் சந்தித்து முறையிட்டார். இந்திய தலைமை தேர்தல் ஆணையம், பிரதமர், ஜனாதிபதி ஆகியோரையும் முறையிடப்போவதாக தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில், ஆர்கே.நகர் தேர்தலையொட்டி மீண்டும் டுவிட்டருக்கு வந்துள்ள விஷால், "ஜனநாயகம் மீண்டும் தலைதூக்கும் என காத்திருக்கிறேன். செயலற்ற அரசுகளிடமிருந்து, நான் விரும்பும் என் நாட்டை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்" என்று கூறியுள்ளார்.