ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இயக்குனர்கள் பாரதிராஜா, பாலச்சந்தர் இணைந்து நடித்த ரெட்டைச்சுழி படத்தை இயக்கிய தாமிரா, நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்கும் படம் ஆண் தேவதை. சிகரம் சினிமாஸ், சைல்ட் புரொடக்ஷ்ன் இணைந்து தயாரிக்கும், இந்தப் படத்தில் சமுத்திரகனி, ரம்யா பாண்டியன் நடிக்கிறார்கள். விஜய் மில்டன் ஒளிப்பதிவு செய்கிறார், ஜிப்ரான் இசை அமைக்கிறார். படம் ஜனவரியில் வெளிவருகிறது. படம் பற்றி இயக்குனர் தாமிரா கூறியதாவது:
தேவதை என்பது சிறப்பியல்பு கொண்ட ஒரு கேரக்டர். அதற்கு ஆண் பெண் என பாகுபாடு இல்லை. பெண்களை ஏமாற்றுவதற்காகவே 'பெண் தேவதை' என தவறாக கற்பிதம் செய்து வைத்திருக்கிறார்கள். நல்லியல்புகள் கொண்ட எல்லோரும் தேவதையே. குறைகள் பெரிதும் இல்லாத ஆணும் ஒரு தேவதை தான். அவன் தான் இந்தப்படத்தின் ஹீரோ. ஆண்களை தேவதையாக்கும் முயற்சியில் இறங்கியது ஏன்..?
ஒருகாலத்தில் நாமாக ஆசைப்பட்டது போய், இன்று ஆசைகள் நம் மீது திணிக்கப்படுகின்றன. இன்றைய நுகர்பொருள் கலாச்சாரத்தில் அதைநோக்கி நாம் துரத்தப்பட்டுக்கொண்டே இருக்கிறோம். வாழ்வதற்காக வேலை செய்கிறோமா..? இல்லை வேலை செய்வதற்காக வாழ்கிறோமா..? இந்த புள்ளியில் இருந்துதான் கதை துவங்குகிறது.
இதில் சமுத்திரக்கனி நடிப்பதற்கு காரணமே கதாபாத்திரத்தில் 80 சதவீத குணாதிசயங்கள் சமுத்திரக்கனியிடம் இயல்பாகவே இருந்தது. ஒரு கதை எல்லாவற்றையும் மாற்றிவிடும் என்பதை நான் நம்பவில்லை. ரசிகர்களுக்குள் இருக்கின்ற சில நினைவுகளை கிளறும்.. பழைய நினைவுகள், சம்பவங்களில் சுற்றவைக்கும்.. அவ்வளவுதான்.
இந்தப்படம் வெளிவந்தபின் தான் சினிமாவில் தனது அடுத்தகட்ட முயற்சியை எடுப்பேன். அந்த அளவுக்கு தனக்கு ஒரு இடத்தைப் பெற்றுத் தரும் என இந்தப்படத்தின் மீது மிகப்பெரிய நம்பிக்கை வைத்துள்ளார் ரம்யா பாண்டியன் என்கிறார் இயக்குனர் தாமிரா.