ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
எஸ்-3 படத்தை அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கும் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. கார்த்தி, கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன், செந்தில் உள்பட பலர் நடிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். அவர் இசையில் உருவான சொடக்கு மேல சொடக்கு போடுது பாடல் சூப்பர் ஹிட்டாகி படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
மேலும், இந்த தானா சேர்ந்த கூட்டம் படம் தெலுங்கில் கேங் என்ற பெயரில் வெளியாகிறது. இந்த படத்தை அடுத்து செல்வராகவன் இயக்கும் படத்தில் சூர்யா நடிப்பதாக கூறப்படும் நிலையில், தற்போது அவர் சில புதுவரவு இயக்குனர்களிடமும் கதை கேட்டு வருகிறார். அதில் சந்தீப்கிஷன் நடித்த மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் சொன்ன கதை சூர்யாவை இம்ப்ரஸ் பண்ணியுள்ளதாம். அதையடுத்து அவரது இயக்கத்தில் சூர்யா நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படம் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.