கேன்ஸ் திரைப்பட விழாவில் 'மாண்புமிகு பறை' | கேரளாவில் தாய்மாமன் கலாசார உறவு இல்லை: ஸ்வாசிகாவின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு | என்னை பற்றி தவறாக பேசுகிறவர்களை கடவுள் பார்த்துக் கொள்வார் : யோகிபாபு | பாகிஸ்தான் சார்ந்த ஓடிடி 'கன்டென்ட்' - தடை விதித்த மத்திய அரசு | சிம்ரனை தொடர்ந்து இலங்கை தமிழ் பேசும் தேவயானி | தக் லைப் அப்பா, மகன் மோதல் கதையா? | ஹீரோ ஆனார் கேபிஒய் பாலா | தியேட்டர், ஓடிடி… அடுத்து டிவியிலும் வரவேற்பைப் பெறாத 'கேம் சேஞ்ஜர்' | பிளாஷ்பேக்: சவாலுக்கு படம் எடுத்த பாலுமகேந்திரா | பிளாஷ்பேக்: குழந்தை நட்சத்திரமாக நடித்த பத்மா சுப்பிரமணியம் |
பிரபல ஒளிப்பதிவாளரும், நடிகரும், இயக்குநருமான ஆர்.என்.கே.பிரசாத் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 82. கர்நாடக மாநிலம், பெங்களூரில் பிறந்த ஆர்.என்.கே.பிரசாத் பெங்களூரு சென்ட்ரல் கல்லூரியில் ஒளிப்பதிவுக்கான பட்டயப் படிப்பில் தேர்ச்சி பெற்றார். பிறகு கன்னடத்தில் "பிரேமதா புத்ரி" எனும் படம் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். தொடர்ந்து 80க்கும் மேற்பட்ட படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய பிரசாத், தமிழிலும் "ரோசாப்பூ ரவிக்கைகாரி", "கவிக்குயில்", "சிட்டுக்குருவி" உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். ஒளிப்பதிவாளராக மட்டுமல்லாமல் சின்னத்திரையில் சில சீரியல்களும் இயக்கி, நடித்தும் உள்ளார். மேலும் கமல்ஹாசனுடன் மைக்கேல் மதன காமராசன், நாயகன் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.
சென்னை, அடையாறில் குடும்பத்துடன் வசித்து வந்த பிரசாத் மாரடைப்பால் காலமானார். மறைந்த பிரசாத்துக்கு உஷா என்ற மனைவியும், ராஜிவ் பிரசாத் என்ற மகனும், ரத்னமாலா என்ற மகளும் உள்ளனர்.
மறைந்த பிரசாத்துக்கு கர்நாடக அரசு சார்பில் 2008-09ம் ஆண்டுக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது டாக்டர்.விஸ்ணுவர்தானா என்ற பெயரில் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
ஆர்.என்.கே.பிரசாத்தின் இறுதி சடங்குகள் இன்று(16.02.12) மாலையில் நடக்கிறது. மறைந்த பிரசாத்தின் உடலுக்கு திரையுலகை சேர்ந்த பலரும் அஞ்சலி செலுத்தினர்.