தமிழ் சினிமாவில் இறங்கு முகமான ஓடிடி வியாபாரம் | ஜீவன் இல்லாத கதாபாத்திரங்களை தவிர்க்கிறேன்: பவ்யா திரிகா | வாட்ஸ்-அப்பில் வந்த லிங்க்கால் ஹேக் ஆன போன் : அபிஷேக் எச்சரிக்கை | கிங் படப்பிடிப்பில் ஷாரூக்கான் காயம் | ஒவ்வொரு தவறும் பாடம் கற்பிக்கிறது : தமன்னாவின் தத்துவப் பதிவு | ஸ்டன்ட் நடிகர் உயிரிழப்பு எதிரொலி : அக்ஷய்குமார் செய்த அருமையான செயல் | ஜூலை 22ல் கூலி படத்தின் மூன்றாவது பாடல் ரிலீஸ் | அடுத்த நல்ல வசூலுக்கு 80 நாட்களாகக் காத்திருக்கும் தமிழ் சினிமா | அடுத்து அஜித் படமா... : ஆதிக்ரவிச்சந்திரன் பதில் | டாப் 10… முதல் இரண்டு இடங்களில் 'குபேரா' |
பிரபல ஒளிப்பதிவாளரும், நடிகரும், இயக்குநருமான ஆர்.என்.கே.பிரசாத் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 82. கர்நாடக மாநிலம், பெங்களூரில் பிறந்த ஆர்.என்.கே.பிரசாத் பெங்களூரு சென்ட்ரல் கல்லூரியில் ஒளிப்பதிவுக்கான பட்டயப் படிப்பில் தேர்ச்சி பெற்றார். பிறகு கன்னடத்தில் "பிரேமதா புத்ரி" எனும் படம் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். தொடர்ந்து 80க்கும் மேற்பட்ட படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய பிரசாத், தமிழிலும் "ரோசாப்பூ ரவிக்கைகாரி", "கவிக்குயில்", "சிட்டுக்குருவி" உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். ஒளிப்பதிவாளராக மட்டுமல்லாமல் சின்னத்திரையில் சில சீரியல்களும் இயக்கி, நடித்தும் உள்ளார். மேலும் கமல்ஹாசனுடன் மைக்கேல் மதன காமராசன், நாயகன் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.
சென்னை, அடையாறில் குடும்பத்துடன் வசித்து வந்த பிரசாத் மாரடைப்பால் காலமானார். மறைந்த பிரசாத்துக்கு உஷா என்ற மனைவியும், ராஜிவ் பிரசாத் என்ற மகனும், ரத்னமாலா என்ற மகளும் உள்ளனர்.
மறைந்த பிரசாத்துக்கு கர்நாடக அரசு சார்பில் 2008-09ம் ஆண்டுக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது டாக்டர்.விஸ்ணுவர்தானா என்ற பெயரில் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
ஆர்.என்.கே.பிரசாத்தின் இறுதி சடங்குகள் இன்று(16.02.12) மாலையில் நடக்கிறது. மறைந்த பிரசாத்தின் உடலுக்கு திரையுலகை சேர்ந்த பலரும் அஞ்சலி செலுத்தினர்.