டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பிரபல ஒளிப்பதிவாளரும், நடிகரும், இயக்குநருமான ஆர்.என்.கே.பிரசாத் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 82. கர்நாடக மாநிலம், பெங்களூரில் பிறந்த ஆர்.என்.கே.பிரசாத் பெங்களூரு சென்ட்ரல் கல்லூரியில் ஒளிப்பதிவுக்கான பட்டயப் படிப்பில் தேர்ச்சி பெற்றார். பிறகு கன்னடத்தில் "பிரேமதா புத்ரி" எனும் படம் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். தொடர்ந்து 80க்கும் மேற்பட்ட படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய பிரசாத், தமிழிலும் "ரோசாப்பூ ரவிக்கைகாரி", "கவிக்குயில்", "சிட்டுக்குருவி" உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். ஒளிப்பதிவாளராக மட்டுமல்லாமல் சின்னத்திரையில் சில சீரியல்களும் இயக்கி, நடித்தும் உள்ளார். மேலும் கமல்ஹாசனுடன் மைக்கேல் மதன காமராசன், நாயகன் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.
சென்னை, அடையாறில் குடும்பத்துடன் வசித்து வந்த பிரசாத் மாரடைப்பால் காலமானார். மறைந்த பிரசாத்துக்கு உஷா என்ற மனைவியும், ராஜிவ் பிரசாத் என்ற மகனும், ரத்னமாலா என்ற மகளும் உள்ளனர்.
மறைந்த பிரசாத்துக்கு கர்நாடக அரசு சார்பில் 2008-09ம் ஆண்டுக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது டாக்டர்.விஸ்ணுவர்தானா என்ற பெயரில் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
ஆர்.என்.கே.பிரசாத்தின் இறுதி சடங்குகள் இன்று(16.02.12) மாலையில் நடக்கிறது. மறைந்த பிரசாத்தின் உடலுக்கு திரையுலகை சேர்ந்த பலரும் அஞ்சலி செலுத்தினர்.