லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
பிரபல ஒளிப்பதிவாளரும், நடிகரும், இயக்குநருமான ஆர்.என்.கே.பிரசாத் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 82. கர்நாடக மாநிலம், பெங்களூரில் பிறந்த ஆர்.என்.கே.பிரசாத் பெங்களூரு சென்ட்ரல் கல்லூரியில் ஒளிப்பதிவுக்கான பட்டயப் படிப்பில் தேர்ச்சி பெற்றார். பிறகு கன்னடத்தில் "பிரேமதா புத்ரி" எனும் படம் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். தொடர்ந்து 80க்கும் மேற்பட்ட படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய பிரசாத், தமிழிலும் "ரோசாப்பூ ரவிக்கைகாரி", "கவிக்குயில்", "சிட்டுக்குருவி" உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். ஒளிப்பதிவாளராக மட்டுமல்லாமல் சின்னத்திரையில் சில சீரியல்களும் இயக்கி, நடித்தும் உள்ளார். மேலும் கமல்ஹாசனுடன் மைக்கேல் மதன காமராசன், நாயகன் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.
சென்னை, அடையாறில் குடும்பத்துடன் வசித்து வந்த பிரசாத் மாரடைப்பால் காலமானார். மறைந்த பிரசாத்துக்கு உஷா என்ற மனைவியும், ராஜிவ் பிரசாத் என்ற மகனும், ரத்னமாலா என்ற மகளும் உள்ளனர்.
மறைந்த பிரசாத்துக்கு கர்நாடக அரசு சார்பில் 2008-09ம் ஆண்டுக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது டாக்டர்.விஸ்ணுவர்தானா என்ற பெயரில் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
ஆர்.என்.கே.பிரசாத்தின் இறுதி சடங்குகள் இன்று(16.02.12) மாலையில் நடக்கிறது. மறைந்த பிரசாத்தின் உடலுக்கு திரையுலகை சேர்ந்த பலரும் அஞ்சலி செலுத்தினர்.