ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சினிமாவில் என்னதான் திறமையும், அறிவும் இருந்தாலும், நேரமும், அதிர்ஷ்டமும் சரியாக அமைந்தால்தான் வெற்றிகள் கிடைக்கும் என்பார்கள். அது இன்னமும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
இளையராஜா இசையுலகின் உச்சத்தில் இருந்த 80களிலும், 90களின் ஆரம்பத்திலும் பல இசையமைப்பாளர்கள் அறிமுகமானார்கள். அதில், ஒரு சில படங்களிலோ, பாடல்களிலே கவனத்தை ஈர்த்தவர்கள் அதிகம். அப்படி ஈர்த்தவர்தான் இசையமைப்பாளர் ஆதித்யன்.
1992ல் கார்த்திக், பானுப்ரியா நடித்த 'அமரன்' படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார். அந்தப் படத்தில் இடம் பெற்ற பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டாகின. கார்த்திக் பாடிய “வெத்தல போட்ட ஷோக்குல...' பாடலும், நடிகை ஸ்ரீவித்யா பாடிய 'டிரிங், டிரிங், சண்டை பஜாரு...' பாடலும் ஒலிக்காத ரிக்கார்டிங் சென்டர்களே இல்லை. அதே படத்தில் இடம் பெற்ற 'சந்திரனே..சூரியனே, வசந்தமே அருகில் வா..' ஆகிய பாடல்களும் ஹிட்டாகின. முதல் பட வரவேற்பே அவரை திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராகக் கொண்டு போய் சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்பட்டவர்.
அதன் பின் 94ல் வெளிவந்த 'சீவலப் பேரி பாண்டி' படத்தில் இடம் பெற்ற 'கிழக்கு செவக்கையிலே..., ஒயிலா பாடும் பாட்டுல...' ஆகிய பாடல்களை அப்போதே டேப் ரெக்கார்டரில் அறுந்து போகும் அளவிற்கு தேய்த்தவர்கள் நிறைய பேர். அறிமுகமான இரண்டு ஆண்டுகளில் 6 படங்களுக்கு மட்டுமே அவர் இசையமைத்திருந்தார். அதில் 'அமரன், சீவலப்பேரி பாண்டி' ஆகிய படங்களின் பாடல்கள் அப்போது இசையமைப்பாளர் ஆதித்யனை அனைத்து திரை ரசிகர்களுக்கும் அவரைக் கொண்டு போய் சேர்த்தது.
அந்தக் காலத்தில் இளையாராஜா, புகழின் உச்சியில் இருந்த போதும், ஏ.ஆர்.ரகுமான் அறிமுகமாகி பரபரப்பை ஏற்படுத்திய சமயத்தில் ஆதித்யனும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தினார் என்பது இந்தக் கால இளைஞர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. 90களின் ஆரம்பத்தில் கல்லூரியில் படித்தவர்களைக் கேட்டால் ஆதித்யன் பாடல்களின் தாக்கத்தை நன்றாகவே சொல்வார்கள்.
இந்த 25 வருடங்களில் அவர் மொத்தமாக சுமார் 20 படங்களுக்கு மட்டுமே இசையமைத்துள்ளார். அதிகப் படங்களுக்கு அவர் இசையமைக்கவில்லை என்றாலும் 'அமரன், சீவலப்பேரி பாண்டி' ஆகிய படங்கள் ஆதித்யன் விட்டுச் சென்ற அடையாளங்கள்.