ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இன்றைக்கு இந்தியா முழுவதும் பேசப்படுகிற படம் பத்மாவதி. பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகி உள்ள படம். சித்தூர் ராணி பத்மாவதிக்கும், முகலாய மன்னன் அலாவுதீன் கில்ஜிக்கும் இடையிலான கதை. பத்மாவதியை தவறாக சித்தரிப்பதாக இந்து அமைப்புகளும், அலாவுதீன் கில்ஜியை தவறாக சித்தரிப்பதாக முஸ்லிம் அமைப்புகளும் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். தணிக்கை குழுவும் இன்னும் படத்திற்கு அனுமதி அளிக்கவில்லை.
ஆனால் இதே கதையை 54 ஆண்டுகளுக்கு முன்பே அதாவது 1963ம் ஆண்டு தமிழில் படமாக உருவாக்கி இருக்கிறார்கள். படத்தின் தலைப்பு சித்தூர் ராணிபத்மினி. பத்மாவதி என்ற பெயரைத்தான் தமிழில் பத்மினி என்று குறிப்பிடுகிறார்கள்.
சித்ரபாபு நாரயண மூர்த்தி இயக்கிய இந்தப் படத்திற்கு வரலாற்று பேராசிரியர் சி.வி.ஸ்ரீதர், இளங்கோ ஆகியோர் வசனம் எழுதியுள்ளனர். சிவாஜி கணேசன் சித்தூர் மகாராஜாவாகவும், வைஜயந்திமாலா ராணிபத்மினியாகவும், எம்.என்.நம்பியார் அலாவுதீன் கில்ஜியாகவும் நடித்திருந்தனர். பிரமாண்ட செட்டுகள் போட்டு பெரிய பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் வெற்றி பெறவில்லை. இப்போது பத்மாவதிக்கு ஏற்பட்டிருக்கும் எதிர்ப்புபோல் அப்போது சித்தூர் ராணிபத்மினிக்கு ஏற்பட்டிருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம்.