ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கனடா நாட்டைச் சேர்ந்தவரான சன்னி லியோன். இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். உலகின் டாப் டென் நீலப்பட நடிகைகளில் ஒருவர். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் இந்தியாவுக்கு வந்தவர். அதன் பிறகு இந்திப் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். தென்னிந்திய படங்களில் ஒரு பாட்டுக்கு ஆடியுள்ளார். தமிழில் வடகறி என்ற படத்தில் ஒரு பாட்டுக்கு ஆடினார். தற்போது தமிழ் படம் ஒன்றில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.
இன்னும் தலைப்பு வைக்கப்படாத இந்தப் படத்தை சாமிடா, சவுகார்பேட்டை, தம்பி வெட்டோத்தி சுந்தரம், பொட்டு படங்களை இயக்கிய வி.சி.வடிவுடையான் இயக்குகிறார். ஸ்டீவ்ஸ் கார்னர் என்ற நிறுவனத்தின் சார்பில் பொன்ஸ் ஸ்டீபன் தயாரிக்கிறார். இதுகுறித்து இயக்குனர் வடிவுடையான் கூறியதாவது:
மிகுந்த பொருட்செலவில் எடுக்கப்படுவதோடு மட்டுமல்லாமல் தென்னிந்திய கலாச்சாரங்களை மையப்படுத்தி எடுக்கப்படும் படமாகும். இந்த சரித்திர படத்தில் நடிக்க கத்திசண்டை, குதிரையேற்றம் மற்றும் மற்ற சண்டைக் கலைகளையும் கற்று வருகிறார் சன்னி லியோன். இதற்காகவே ஆந்திராவில் இருந்து ஒரு சிறப்பு பயிற்சியாளர் மும்பைக்கு போய் சன்னி லியோனுக்கு பயிற்சி அளித்து வருகிறார். இந்த பிரமாண்ட படத்துக்காக 150 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருக்கிறார்.
இந்த படத்தில் 70 நிமிட காட்சிகளில் கிராபிக்ஸ் காட்சிகள் இடம்பெறுகிறது . பாகுபலி, 2.0 படங்களில் பணி புரிந்த கம்பெனிகளை ஒப்பந்தம் செய்திருக்கிறோம். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் தயாராகும் இந்த படத்தின் தலைப்பு விரைவில் அறிவிக்கப்படும். என்கிறார் வடிவுடையான்.
படத்தில் நடிப்பது பற்றி சன்னி லியோன கூறியிருப்பதாவது: இந்த படத்துக்கு பிறகு என்னுடைய அடையாளம் நிச்சயம் மாறும். ஆக்ஷன் காட்சிகளில் நடிக்க எனக்கு எப்போதுமே பிடிக்கும். இந்த மாதிரி கதைகளுக்காக சில வருடங்களாகவே காத்திருக்கிறேன். வி சி வடிவுடையான் இந்த கதையை எனக்கு சொன்ன போதிலிருந்தே நான் படத்துக்காக தயாராக ஆரம்பித்து விட்டேன். தென்னிந்தியாவை எனக்கு ரொம்ப பிடிக்கும், ஒரு நேரடி தமிழ் படத்தில் நடிப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. தென்னிந்தியாவில் எனக்கு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது, குறிப்பாக ஆந்திரா, கேரளா, தமிழ்நாட்டில் நிறைய ரசிகர்கள் உள்ளனர் என்கிறார் சன்னி லியோன்.