ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தங்கர் பச்சான் இயக்கிய படம் களவாடிய பொழுதுகள். மூன்று ஆண்டுகளுக்கு முன்பே முடிந்துவிட்ட இந்தப் படத்தை ஐங்கரன் பிலிம்ஸ் சார்பில் கருணாகரன் தயாரித்தார். பிரபு தேவா, பூமிகா, பிரகாஷ்ராஜ், கருப்புராஜா, சத்தியன் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். பரத்வாஜ் இசை அமைத்துள்ளார், ஒளிப்பதிவு செய்து இயக்கி உள்ளார் தங்கர் பச்சான்.
தயாரிப்பாளரின் பொருளாதார பிரச்சினைகள் காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக கிடப்பில் கிடந்த இந்தப் படத்தை தற்போது இந்த மாதம் வெளியிட தயாரிப்பாளர் கருணாகரன் முயற்சி மேற்கொண்டுள்ளார். இதன் முதல்கட்டமாக இதுவரை வெளிவராத படத்தின் ஸ்டில்களை வெளியிட்டு டிசம்பர் வெளியீடாக அறிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
கலை என்பது மக்களுக்கானது. மக்களின் நெஞ்சங்களை விட்டு என்றைக்கும் நீங்காத திரைப்படங்கள் எப்பொழுதாவது ஒன்று அரிதாகவே அமைகிறது. அழகி,சொல்ல மறந்த கதை,பள்ளிக்கூடம்,ஒன்பது ரூபாய் நோட்டு போன்ற தரமான வெற்றிப்படங்களை இயக்கிய தங்கர் பச்சானின் மற்றுமொரு சிறந்த படைப்பாக நீண்ட கால காத்திருப்புக்குப்பின் களவாடிய பொழுது திரைப்படம் இம்மாதம் திரைக்கு வருகிறது.
காதலின் வலியை அதன் அனுபவத்தை உணராத, அதனை கடந்து செல்லாத மனிதர்கள் இல்லை என்றே சொல்லலாம். காதலிக்கின்ற அனைவருக்கும் அது கை கூடுவதில்லை.அழகி திரைப்படம் காதலிக்காதவர்களைக்கூட கலங்க வைத்தது போலவே களவாடிய பொழுதுகள் படமும் அனைவரின் மனதையும் கலங்க வைக்கும் படைப்பாக உருவாகி இருக்கிறது.
காதலிக்க போகிறவர்களுக்கு ஒரு எச்சரிக்கை. காதலித்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஒரு பாடம்.காதலித்து முடித்தவர்களுக்கு மீண்டும் ஒரு கடந்தகால நினைவூட்டலாக இப்படத்தை படைத்திருக்கிறார் தங்கர் பச்சான். நல்ல திரைப்படங்கள் எப்போது வந்தாலும் மக்கள் ஆதரவு தருவார்கள். இந்த படத்திற்கும் ஆதரவு தருவார்கள் என்று நம்புகிறோம். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டிருக்கிறது.