ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும், தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும் பணியாற்றி வரும் நடிகர் விஷால் அடுத்த அதிரடியாக தேர்தல் களத்தில் குதிக்கிறார். நடைபெற இருக்கிற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். இது சினிமா துறையிலும், அரசியலிலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாளை (டிசம்பர் 4) அவர் வேட்புமனு தாக்கல் செய்கிறார். தேர்தலில் போட்டியிடுவது குறித்து விஷால் அளித்துள்ள விளக்கம் வருமாறு:
இந்த தேர்தலில் போட்யிடுவதால் விஷாலுக்கு அரசியல் ஆசை வந்துவிட்டது என்று எல்லோரும் நினைக்கிறார்கள். இந்த தேர்தலில் போட்டியிடுவதால் எனக்கு அரசியல் ஆதாயம் எதுவும் இல்லை. மாற்றத்தை மக்கள் விரும்புகிறார்கள். அதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தரவேண்டும். ஒரு சாதாரண மனிதனாக மக்களின் தேவையை பூர்த்தி செய்யவே தேர்தலில் நிற்கிறேன்.
ஆர்.கே.நகர் தொகுதி பற்றி நான் நன்கு அறிவேன். 2015ம் ஆண்டு வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட காலத்தில் ஆர்.கே.நகரில் களத்தில் இறங்கி வேலை செய்திருக்கிறேன். அவர்களின் பிரச்சினைகள், தேவைகளை அறிந்து வைத்திருக்கிறேன். அந்த தொகுதியில் சாதாரண ஏழை எளிய மக்கள் அதிகம் வாழ்கிறார்கள். அவர்களின் அடிப்படை தேவைகள் கூட பூர்த்தி செய்யப்படவில்லை. விளையாட்டுத்துறையில் சிறந்த இளைஞர்கள் இந்த தொகுதியில் இருக்கிறார்கள். ஆனால் அடிப்படை வசதி இல்லாமல் அவர்களால் எதையும் சாதிக்க முடியவில்லை. அந்த மக்களுக்காக எதையாவது செய்ய வேண்டும் என்பதற்காகவே இந்த தேர்தலில் போட்டியிடுகிறேன் என்கிறார் விஷால்.