ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
அறிமுக இயக்குனர் கல்யாண் இயக்கத்தில் பிரபுதேவா, ஹன்சிகா மற்றும் பலர் நடிக்க உருவாகி வரும் 'குலேபகாவலி' படம் பொங்கலுக்கு வெளியாகும் என அப்படத்தைத் தயாரித்துள்ள கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
நயன்தாரா நடிக்க சமீபத்தில் வெளிவந்து வெற்றி பெற்ற 'அறம்' படத்திற்குப் பிறகு இந்நிறுவனத்தின் இரண்டாவது படம் இது. நயன்தாராவின் மேலாளர் என்று சொல்லப்படும் கோட்டபாடி ஜே. ராஜேஷ் தான் கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
'குலேபகாலி' படத்தின் முதல் பார்வை போஸ்டர்களில் அந்தக் கம்பெனியின் பெயர் இருக்கிறது. அப்போது அது பற்றி பலருக்கும் தெரியவில்லை. ஆனால், 'அறம்' படத்திற்குப் பிறகு அந்த நிறுவனம் பிரபலம் ஆகியுள்ளது. அந்த நிறுவனத்தின் தயாரிப்பில் பிரபுதேவா எப்படி நடித்துள்ளார் என்பதுதான் இன்றைய ஆச்சரியம்.
நயன்தாராவும், பிரபுதேவாவும் ஒரு காலத்தில் காதலர்களாக இருந்தார்கள். பிரபுதேவாவுக்காக நயன்தாரா இந்து மதத்திற்கும் மாறினார். அதன் பின் அந்த காதல் விவகாரம் அப்படியே அமுங்கிப் போனது.