Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சிம்பு திருந்த மாட்டார் : தயாரிப்பாளர் காட்டம்

30 நவ, 2017 - 15:38 IST
எழுத்தின் அளவு:
Producer-Michael-Rayappan-slams-Simbu

சிம்பு, இனியும் திருந்தி படம் பண்ணுவார் என்று தெரியவில்லை என தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் கூறியுள்ளார். சிம்புவை வைத்து "அன்பானவன் அசராதவன் அடங்காதவன்" படத்தை தயாரித்தவர் மைக்கேல் ராயப்பன். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய இப்படம் படுதோல்வியை தழுவி, தயாரிப்பாளருக்கு சுமார் ரூ.18 கோடி நஷ்டத்தை கொடுத்தது.

சிம்பு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் தயாரிப்பாளர் சங்கத்திடம் முறையிட்டுள்ளார் மைக்கேல் ராயப்பன். இதனால் சிம்புவிற்கு ரெட் கார்டு போடப்படும் சூழல் உருவாகி உள்ளது. எதனால் இப்படி ஒரு சூழல் உருவானது என்பது குறித்து தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன், ஒரு டிவிக்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது...

மிருதன் படம் முடிந்த பிறகு சிம்பு எனக்கு போன் செய்தார். நான் கால்ஷீட் தருகிறேன், என்னை வைத்து படம் பண்ணுங்கள், நான் முன்பு மாதிரி கிடையாது, ஒழுங்காக படப்பிடிப்பிற்கு வந்துவிடுவேன். வாழ்க்கையில் பணத்தின் அருமையை புரிந்து கொண்டேன். ஐந்தாயிரம் ரூபாய் கூட இல்லாமல் கஷ்டப்படுகிறேன். என்னை வைத்து படம் எடுங்கள் கண்டிப்பாக நான் முழு ஒத்துழைப்பு கொடுப்பேன் என்றார்.

நானும் அவரின் பேச்சை நம்பி படத்தை ஆரம்பித்தேன். ஜனவரியில் கால்ஷீட் தருகிறேன் என்றார். ஆனால் சொன்னபடி படத்தை ஆரம்பிக்கவில்லை. அவரிடம் பேச வீட்டிற்கு சென்றேன், என்னை ஐந்து மணிநேரம் காக்க வைத்தார். அதன் பின்னர் படப்பிடிப்பு துவங்கியது. ஆனாலும், ஒழுங்காக படப்பிடிப்பிற்கு வருவது கிடையாது, படத்தில் தலையீடு என தொடர்ந்து தொல்லை கொடுத்து படத்தை கெடுத்துவிட்டார். இதனால், நான் நஷ்டப்பட்டு இப்போது கடனாளியாக, கடன் கொடுத்தவர்களிடம் பதில் சொல்ல முடியாமல் இருக்கிறேன்.

சிம்புவிற்கு படத்தில் நடிக்கணும் என்றெல்லாம் ஆசை கிடையாது. தனக்கு பணம் கிடைக்க வேண்டும் என்பதற்காக என்ன பொய் வேண்டுமானாலும் கூறுவார். இனியும் அவர் திருந்தி படம் பண்ணுவார் என்று தெரியவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in