ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
விரைவில் தனது புதிய அரசியல் கட்சியின் பெயரையும், கொள்கையையும் அறிவிக்க உள்ளதாக கமல் தெரிவித்துள்ளார். டில்லியில் ஆங்கில பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டி அளித்த கமல் இதனை தெரிவித்துள்ளார்.
பேட்டியில் கமல் கூறுகையில், அரசியலுக்கு வர காரணமே எங்கும் மலிந்து கிடக்கும் ஊழலை துடைத்து எறிய வேண்டும் என்பது தான். தமிழக மக்களின் நலனுக்காகவும், வளர்ச்சிக்காவும் நான் அரசியலில் ஈடுபடுகிறேன்.
அரசியலில் என்னை முன்னிலைப்படுத்த விரும்பவில்லை. மாற்றத்தை முன்னிலைப்படுத்த விரும்புகிறேன். மாற்றத்தை விரும்புபவர்கள் என் பக்கம் வந்து நிற்பார்கள். அரசியல் என்பது பணம் சம்பாதிக்கும் தொழிலோ, சினிமா தயாரிப்பு போன்ற தொழிலோ அல்ல. அதனால் அரசியலில் தோல்வி பற்றி எனக்கு எந்த பயமும் கிடையாது.
விரைவில் என்னுடைய அரசியல் கட்சியின் பெயரையும், கொள்கையையும் வெளியிடுவேன். சித்தாந்தங்களின் அடிப்படையின் பாஜ., மற்றும் காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க மாட்டேன். மக்களுக்கு எது தேவையோ அதுவே என்னுடைய தேவை. ஆகையால் தமிழகத்தின் நலன் கருதி வேண்டுமானால் கூட்டணி வைக்கலாம். அரசியலில் யாரும் தீண்டத்தகாதவர்கள் இல்லை. எந்த வகையிலான தீவிரவாதமானாலும் அதை நிச்சயம் ஆதரிக்கப் போவதில்லை என்றார்.
பத்மாவதி பட சர்ச்சை குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த கமல், நான் அந்த படத்தை பார்க்கவில்லை. பலர் அந்த படத்தை பார்க்காமலேயே தடை விதிக்க வேண்டும் என கூறுகிறார்கள். இது சரியல்ல.