ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கந்துவட்டி கொடுமையால் தயாரிப்பாளர் அசோக்குமார் நவம்பர் 21 ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இதற்கு காரணமான பைனான்சியர் அன்புசெழியனுக்கு ஆதரவாகவும், எதிர்பாகவும் திரையுலகில் பலரும் கருத்து கூறி வருகின்றனர்.
இவர்களில் அன்புசெழியனுக்கு ஆதரவாக முதல் ஆளாக ஆதரவு குரல் கொடுத்தவர் டைரக்டர் சீனுராமசாமி. அன்புச்செழியன் உத்தமர் என நவம்பர் 22 என்று கூறி இருந்தார். இந்நிலையில் இன்று (நவம்பர் 26) தனது நிலைப்பாட்டை மொத்தமாக மாற்றி, தனது டுவிட்டர் பக்கத்தில் வேறு விதமாக கருத்து பதிவிட்டுள்ளார்.
70 வருட சினிமாவை பைனான்சியர்கள் தான் இயக்கி உள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். கிட்டதட்ட அன்புச்செழியனை தனக்கு யார் என்றே தெரியாது என்ற அளவில் அவர் வெளியிட்டுள்ள டுவீட், திரையுலகில் பலரையும் அதிர வைத்துள்ளது. அவரின் இந்த மாற்றத்திற்கு என்ன காரணம் என்ற கேள்வியையும் எழுப்பி உள்ளது.
கடித வடிவில் சீனு ராமசாமி பதிவிட்டுள்ள டுவீட் விபரம் :
" நெஞ்சம் நிறைந்த நண்பர்களுக்கு வணக்கம்,
பார்த்து பேசி ஒரு படம் எங்கள் கம்பெனி தயாரிப்பில் செய்யுங்கள் என்று வாக்குறுதியும் நம்பிக்கையும் தந்த அன்பர் நண்பர் திரு.அசோக்குமாரின் துக்க கரமான முடிவு, நெஞ்சடைத்து நான் உறைந்தேன். என் குடும்பத்திலும் இது போன்ற இழப்புண்டு. இதற்கு ஆறுதல் எவரும் சொல்ல முடியாது. நினைவில் கனவில் வந்து நிற்பர்.
நான் திரு.அன்புசெழியனின் சாதிக்காரன் இல்லை. வட்டிக்கு வாங்கி படம் எடுப்பவன் இல்லை. ஏன் நடிகர்களின் தேதியை பெற்று பர்ஸ்ட் காப்பி(first copy) கூட எடுக்கும் எண்ணமும் இல்லை. சம்பளத்திற்கு மட்டும் படம் இயக்க வேண்டும் என்று நினைப்பவன்.
70 வருட சினிமா, பைனான்சியர்கள் தான் இயக்கி உள்ளனர். அரசு லோன் கிடையாது. சினிமாக்காரனுக்கு வீடு கூட கிடைக்காது.
ஒருமுறை விமான நிலையத்தில் செழியன் சிரித்துக் கொண்டே 20 கோடி பேலன்ஸ் அவர் தரனும், இவர் 30 கோடிண்ணே டீ சாப்புடுறீங்களா? என்றார். அவ்வளவு தான் எனக்கு அவரை புரியும். மூன்று பைசா வட்டிக்கு தருவாராம்.
எங்கள் சங்கங்கள் தலையிட்டு சில நிபந்தனைகள் இட வேண்டும். அதிக பணம் பெறுதல் தேவைக்கதிகமாக வட்டியும் கட்டுதல் போன்ற சில கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும்.
வியாபாரமும் கலையும் முட்டிக் கொண்ட துயரத்தில் உழைப்பாளி அசோக்கின் பிரிவுக்கு ஆழ்ந்த இரங்கல்".
இவ்வாறு சீனுராமசாமி குறிப்பிட்டுள்ளார்.