ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கந்துவெட்டி பிரச்னை காரணமாக தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக சினிமா பைனான்சியர் அன்புசெழியன் மீது வழக்கு பதிவு செய்து அவரை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த நிலையில் கந்துவட்டி பிரச்னைக்கு சினிமாக்காரர்களின் சரியான திட்டமிடல் இல்லாமையே காரணம் என்ற சரத்குமார் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது:
வங்கியில் கடன் வாங்கினால் அதற்கு சொத்து ஆதாரம் கேட்பார்கள். கடனை உரிய முறையில் திருப்பிச் செலுத்தாவிட்டால் சொத்தை ஏலத்துக்கு கொண்டு வருவார்கள். இது எப்படி தவறாகும். அது மாதிரிதான் சினிமா பைனான்சியர்களும். சொத்து ஆதாரங்கள் இல்லாமல் கேட்பவர்களின் தொழில் நம்பிக்கை வெறும் வாய் வார்த்தை நம்பிக்கை அடிப்படையில்தான் அவர்கள் கடன் கொடுக்கிறார்கள். கடனை பெறும் தயாரிப்பாளர்கள் படத்தை சரியாக திட்டமிட்டு எடுத்து, வியாபாரம் செய்து கடனை உரிய முறையில் திருப்பிச் செலுத்தினால் எந்த பிரச்னையும் இல்லையே.
இயக்குனர் சசிகுமார் நல்ல மனிதர். அவர் அன்பு செழியனுடன் 7 ஆண்டுகள் வரவு செலவு வைத்திருக்கிறார். அன்பு செழியன் சரியில்லாதவர் என்றால் எப்படி இத்தனை ஆண்டுகள் இருவரும் இணைந்திருக்க முடியும். எந்த பிரச்னைக்கும் தற்கொலை தீர்வல்ல. பிரச்னைகளை சந்தித்து தான் வாழ வேண்டும். அசோக்குமாருக்காக நான் வருந்துகிறேன். அவர் ஏன் இப்படி ஒரு முடிவை எடுத்தார் என்று தெரியவில்லை.
இவ்வாறு சரத்குமார் கூறியுள்ளார்.