ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
எத்தனையோ திறமையான பாடகர்கள் இருந்தும் அவர்கள் இன்னும் புகழ் வெளிச்சத்திற்கு வராமல் உள்ளனர். இவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பை இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானும், 7-அப்பும் இணைந்து ஏற்படுத்தி கொடுத்துள்ளனர்.
மாநிலம் முழுக்க குரல் தேடலாக "7அப் தமிழ்நாட்டின் குரல்" அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் பங்கேற்க விரும்புகிறவர்கள் 18001200077 என்ற இலவச எண்ணுக்கு அழைப்பு விடுத்து தங்களது குரலை பதிவு செய்யலாம்.
இது தவிர குரல் பதிவு செய்வதற்காக பிரத்யேக ஸ்டுடியோக்கள் சென்னை, கோவை, கடலூர், ஈரோடு, மதுரை, வேலூர், காஞ்சிபுரம், நாகர்கோவில், சேலம், திருவண்ணாமலை, திருச்சி, திருப்பூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, காரைக்குடி ஆகிய இடங்களில் அமைக்கபட்டுள்ளன.
அனைத்து ஊர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 20 பேர் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு நடுவர் குழு முன்னிலையில் பாட வைக்கப்படுவர். இவர்களில் 7 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் குழுவினர் பயிற்சி தருவார்கள்.
அதன்பிறகு, ஏ.ஆர்.ரஹ்மானின் 25-ம் ஆண்டு கொண்டாட்டமாக அடுத்தாண்டு, ஜனவரி மாதம் சென்னையில் நடக்கும் இசை நிகழ்ச்சியில் ரஹ்மான் உடன் இணைந்து பாடும் வாய்ப்பை பெறுவார்கள். இவர்களில் ஒருவரை சிறந்த பாடகராக தேர்ந்தெடுத்து ரஹ்மானின் இசைப்பள்ளியில் பயில ஒரு ஆண்டுக்கான உதவித்தொகை அளிக்கப்படவுள்ளது.