ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பிரபல பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ், சுவாமி அய்யப்பன் என்ற படத்தில் பாடிய பாடல் ஹரிவாராசனம்... இந்தப் பாடல் கேரள மக்களை மிகவும் கவர்ந்ததால் இந்தப் பாடல் சபரிமலை அய்யப்பன் கோவிலில் இரவு நடை சாத்தும் போது ஒலிக்கும் பாடலாக பல ஆண்டுகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பாடலில் சுவாமி என்ற வார்த்தை விடுபட்டுள்ளது என்றும், ஹரி, விமர்த்தனம் என்ற இரண்டு வார்த்தைகளை ஜேசுதாஸ் ஒரே வார்தையாக பாடியுள்ளார் என்றும் அதனால் இவற்றை திருத்தி மறுபதிவு செய்ய கோவில் தேவசம் போர்டு முடிவு செய்தது.
இந்த முடிவுக்கு பாடலுக்கு இசை அமைத்துள்ள பழம்பெரும் இமை அமைப்பாளர் தேவராஜன் பெயரில் நடத்தப்பட்டு வரும் அறக்கட்டளை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சதீஷ் ராமச்சந்திரன் கூறியதாவது:
ஹரிவாரசனம் பாடலில் பிழை இருப்பதாக புகழ்பெற்ற இசை கலைஞர்களோ, சமஸ்கிருத அறிஞர்களோ கூறவில்லை. இசை பற்றியும் யாரும் குறைத்து மதிப்பிடவில்லை. அப்படி இருக்கும்போது இந்த பாடலை ஏன் மறுபதிவு செய்ய வேண்டும். இது யாரோ சிலரின் கூட்டு சதியாகவே தெரிகிறது. தேவராஜனின் புகழுக்கும், திறமைக்கும் இழுக்கு ஏற்படுத்துகிற செயல் இது. இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம் என்கிறார் சதீஷ் ராமச்சந்திரன்.