ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சசிகுமாரின் உறவினரும், தயாரிப்பாளருமான அசோக் குமார் நேற்று தற்கொலை செய்து கொண்டார். தனது தற்கொலைக்கு காரணம் பைனான்சியர் அன்புசெழியன் தான் என கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார். இதனால் அன்பு செழியன் மீது போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது. ஆனால் அவர் தலைமறைவாகிவிட்டதால் அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அன்புசெழியன் மீதான குற்றசாட்டை அவரின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்தின் மேலாளர் முரளி மறுத்துள்ளார். இதுகுறித்து கோபுரம் பிலிம்ஸ் சார்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது...
அசோக் குமார் தற்கொலைக்கு முன்பு கடிதம் எழுதியதாக கூறப்படுவது உண்மையில்லை. அசோக் குமார், சசிகுமாரின் உதவியாளர். நாங்கள் அசோக் குமார் என்பவரிடம் எந்த பண வரவு செலவும் செய்யவில்லை. சசிகுமார் தான் பணம் பெற்றுள்ளார். எங்களுடன் எந்தவித பண தொடர்பும் செய்யாத அசோக் குமார் எங்களை கடிதத்தில் எழுதி வைத்துள்ளார் என்பது அதிர்ச்சி அளிக்கிறது.
நாங்கள் கடந்த 20 ஆண்டுகளாக சினிமா தொழில் செய்கிறோம். எங்கும் எங்கள் மேல் எந்த புகாரும் கிடையாது.
இவ்வாறு முரளி கூறியிருக்கிறார்.